News March 16, 2025

நாதக நாமக்கல் மா.செ. விலகல்

image

சீமான் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து, கட்சியில் இருந்து விலகுவதாக நாதக நாமக்கல் மாவட்டச் செயலாளர் பாஸ்கர் அறிவித்துள்ளார். தமிழனின் முதன்மைப் பகையான வலது சாரிகளிடம் நேரடி கூட்டணி வைக்காத குறை ஒன்றே என்ற அளவிற்கு சீமான் உறவு கொண்டு வருவதாகவும், தனது சுயலநலனுக்காக தமிழ் தேசியத்தை அடமானம் வைத்துள்ளதாகவும் சாடியுள்ளார். மேலும், இனி அவருடன் பயணிப்பது தமிழின துரோகம் என்றும் விமர்சித்துள்ளார்.

Similar News

News July 5, 2025

ரிதன்யா மரணம் வெறும் தற்கொலை அல்ல: சீமான்

image

இனி வாழவே முடியாத நிலைக்கு அவரை தள்ளி, தற்கொலை செய்ய வைத்த திட்டமிட்ட படுகொலை இது. இந்த நூற்றாண்டிலும் வரதட்சணை கொடுமையால் பெண்கள் உயிரிழப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என ரிதன்யா தற்கொலை குறித்து பேசியுள்ளார் நாதகவின் சீமான். அரசியல் அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு காரணமான கணவர், மாமனார், மாமியார் மீது எளிதில் ஜாமினில் வெளிவரும் வகையில் வழக்கு பதிவு செய்துள்ளனர் என சீமான் சாடியுள்ளார்.

News July 5, 2025

எடுத்த காரியத்தில் வெற்றி பெற…

image

எந்த விஷயத்திலும் வெற்றி பெற, அனுமனின் அனுக்கிரகம் வேண்டும். சனிக்கிழமை மட்டுமின்றி, தினமும் 21 முறை இந்த அனுமன் ஸ்லோகத்தை சொல்லி வாருங்கள்.

ஸ்ரீராம தூத மஹாதீர
ருத்ர வீர்ய ஸமத் பவ
ஆஞ்சநேய கர்ப்ப ஸம்பூத
வாயு புத்திர நமோஸ்துதே.
அர்த்தம்: ‘ராமனின் தூதனாகிய, மிகுந்த வீரமுள்ள, ருத்ரனின் சக்தியுடன் பிறந்த, ஆஞ்சநேயரே, வாயு புத்திரனே, உமக்கு வணக்கம்.

News July 5, 2025

வேலைவாய்ப்பு இலக்கை முந்தி TNPSC சாதனை..

image

ஜனவரி 2026-க்குள் 17,595 காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், ஜூன் 2024 முதல் ஜூன் 2025 வரை 17,702 இளைஞர்களை தேர்வு செய்துள்ளது. இதன்மூலம், 7 மாதங்களுக்கு முன்பாகவே நிர்ணயித்த இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது TNPSC. மேலும் கூடுதலாக 2500+ இடங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அது 2026 ஜனவரிக்குள் நிரப்பப்படும் எனவும் TNPSC அறிவித்துள்ளது.

error: Content is protected !!