News March 16, 2025

பேங்க் ஆப் பரோடாவில் வேலை.. மார்ச் 21 வரை நீடிப்பு

image

பேங்க் ஆப் பரோடாவில் காலியாக உள்ள 518 ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்ஸ் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் கடந்த 11ஆம் தேதியுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அந்த அவகாசம் வருகிற 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வேலையில் சேர விரும்புவோர், இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை பகிருங்கள்.

Similar News

News July 9, 2025

’சுரங்கப்பாதைக்கு அனுமதி தராததே விபத்துக்கு காரணம்’

image

கடலூர் அருகே செம்மங்குப்பம் ரயில்வே பாதையைக் கடக்கும்போது தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதியது. இதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைக்க தென்னக ரயில்வே ஒப்புதல் அளித்தும் மாவட்ட ஆட்சியர் ஓராண்டாக அனுமதி தராததே விபத்துக்கு காரணம் என இபிஎஸ் குற்றம் சுமத்தியுள்ளார். நடப்பாண்டில் கடலூரில் எத்தனை முறை CM ஸ்டாலின் ஆய்வுக்கூட்டம் நடத்தினார் எனவும் கேள்வி எழுப்பினார்.

News July 9, 2025

அதிகாலையில் எழுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள்

image

அதிகாலையில் கண் விழிப்பதும், இரவு சீக்கிரமே படுக்கைக்குச் செல்வதும்தான் சிறந்தது. அதிகாலை எழுவதால் மூளை நரம்பு இயக்கங்கள் சீராகச் செயல்படும். யோகா, உடற்பயிற்சி செய்ய போதுமான நேரம் கிடைக்கும். இதனால் நுரையீரல் வலுவடையும். ஆஸ்துமா, சைனஸ், உடல் பருமன், சர்க்கரைநோய் வருவது குறையும். பின்பு இரவு சரியான நேரத்துக்குத் தூக்கம் வருவதால், மன அழுத்தம், ரத்த அழுத்தம் வராது என்கின்றனர் மருத்துவர்கள்.

News July 9, 2025

ஜூலை 9… வரலாற்றில் இன்று!

image

*1866 – பனகல் அரசர், சென்னை மாகாணத்தின் 2-ஆவது முதலமைச்சரானார். *1877 – முதலாவது விம்பிள்டன் போட்டிகள் ஆரம்பமாயின. *1930 – திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தரின் பிறந்த தினம் * 2006 – சைபீரியாவில் இர்கூத்ஸ்க் விமான நிலையத்தில் 200 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 125 பேர் உயிரிழந்தனர். *2011 – சூடானில் இருந்து பிரிந்து தெற்கு சூடான் தனி நாடானது.

error: Content is protected !!