News March 16, 2025
இதென்ன சோதனை… டயரின்றி தரையிறங்கிய விமானம்!

பாகிஸ்தானில் விமான பயணத்தின்போது பயணிகளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. லாகூர் விமான நிலையத்தில் சரியான முறையில் தரையிறங்கிய விமானத்தின் பின்பக்க சக்கரங்களில் ஒன்று மாயமாகி இருந்ததுதான் அந்த அதிர்ச்சிக்கு காரணம். நடுவானில் சக்கரம் கழன்று விழுந்ததா? அல்லது புறப்படும்போதே சக்கரம் இல்லாமல் இருந்ததா? என விமான நிறுவன அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News July 9, 2025
’சுரங்கப்பாதைக்கு அனுமதி தராததே விபத்துக்கு காரணம்’

கடலூர் அருகே செம்மங்குப்பம் ரயில்வே பாதையைக் கடக்கும்போது தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதியது. இதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைக்க தென்னக ரயில்வே ஒப்புதல் அளித்தும் மாவட்ட ஆட்சியர் ஓராண்டாக அனுமதி தராததே விபத்துக்கு காரணம் என இபிஎஸ் குற்றம் சுமத்தியுள்ளார். நடப்பாண்டில் கடலூரில் எத்தனை முறை CM ஸ்டாலின் ஆய்வுக்கூட்டம் நடத்தினார் எனவும் கேள்வி எழுப்பினார்.
News July 9, 2025
அதிகாலையில் எழுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள்

அதிகாலையில் கண் விழிப்பதும், இரவு சீக்கிரமே படுக்கைக்குச் செல்வதும்தான் சிறந்தது. அதிகாலை எழுவதால் மூளை நரம்பு இயக்கங்கள் சீராகச் செயல்படும். யோகா, உடற்பயிற்சி செய்ய போதுமான நேரம் கிடைக்கும். இதனால் நுரையீரல் வலுவடையும். ஆஸ்துமா, சைனஸ், உடல் பருமன், சர்க்கரைநோய் வருவது குறையும். பின்பு இரவு சரியான நேரத்துக்குத் தூக்கம் வருவதால், மன அழுத்தம், ரத்த அழுத்தம் வராது என்கின்றனர் மருத்துவர்கள்.
News July 9, 2025
ஜூலை 9… வரலாற்றில் இன்று!

*1866 – பனகல் அரசர், சென்னை மாகாணத்தின் 2-ஆவது முதலமைச்சரானார். *1877 – முதலாவது விம்பிள்டன் போட்டிகள் ஆரம்பமாயின. *1930 – திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தரின் பிறந்த தினம் * 2006 – சைபீரியாவில் இர்கூத்ஸ்க் விமான நிலையத்தில் 200 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 125 பேர் உயிரிழந்தனர். *2011 – சூடானில் இருந்து பிரிந்து தெற்கு சூடான் தனி நாடானது.