News March 15, 2025

ஓய்வுக்கு பின் என்ன செய்வேன்? – மனம் திறந்த கோலி!

image

கிரிக்கெட் உலகின் உச்ச நட்சத்திரமாக திகழும் விராட் கோலி, பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். தற்போது 36 வயதாகும் அவர், ஓய்வு குறித்து மனம் திறந்துள்ளார். ஓய்வுபெற்ற பிறகு என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றும், சக வீரரிடம் இதுபற்றி கேட்டபோது அவரும் இதே பதிலைத் தான் கூறினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், நிறைய பயணங்கள் மேற்கொள்வேன் என்றும் விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News March 16, 2025

IPL: இந்த அணிக்கும் காத்திருக்கும் அதிர்ச்சி

image

அடுத்த வாரம் IPL தொடங்க உள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அதிர்ச்சி கிடைத்துள்ளது. அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு பெங்களூருவில் உள்ள NCA இன்னும் அனுமதி சான்றிதழ் வழங்கவில்லை. இதனால் வரும் 23ம் தேதி SRH அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்க முடியாது எனத் தெரிகிறது. பங்கேற்றாலும், பேட்டிங் மட்டும்தான் செய்வார். விக்கெட் கீப்பிங்கில் இருந்து விலக்கி வைக்கப்படுவார் எனத் தெரிகிறது.

News March 16, 2025

மஸ்க்கின் மகனுக்கு உதவிய டிரம்ப்

image

டிரம்பின் ஹெலிகாப்டரில் மஸ்க்கின் மகனை ஏற்றிச் செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. புளோரிடாவில் உள்ள தனது வீட்டிற்கு அமெரிக்க ஜனாதிபதியுடன் மஸ்கின் மகன் சென்றார். சிறுவன் ஹெலிகாப்டரில் ஏற சிரமப்பட்டபோது, டிரம்ப் அவனுக்கு உதவினார். கடந்த சில நாட்களாக மஸ்க் தனது மகனை அமெரிக்காவில் நடக்கும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வது குறிப்பிடத்தக்கது.

News March 16, 2025

WPL: இவர்களுக்கே ஆட்ட நாயகி, தொடர் நாயகி விருது

image

WPL பைனலில் DC அணியை வீழ்த்தி, MI அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதில், பொறுப்புடன் ஆடி 44 பந்துகளில் 66 ரன்கள் குவித்த MI அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆட்ட நாயகி விருதை வென்றார். அத்துடன், இந்த தொடரில் மொத்தம் 523 ரன்கள் குவித்த MI அணியின் நாட் சீவர் பிரண்ட் தொடர் நாயகி விருதை வென்று அசத்தினார். மேலும், நாட் சீவர் பிரண்ட் ஆரஞ்சு தொப்பியையும், அமெலியா கெர் பர்பிள் தொப்பியையும் கைப்பற்றினர்.

error: Content is protected !!