News March 15, 2025

தெலங்கானாவில் தேர்வு மையம் – கொந்தளித்த காங்.

image

<<15768647>>தெற்கு ரயில்வே<<>> பணிக்கான தேர்வெழுதும் தமிழக தேர்வர்கள் 90% பேருக்கு தெலங்கானாவில் மையம் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை, ஒன்றிய அரசு எப்போதும் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக சாடினார். தமிழக தேர்வர்கள் தமிழ்நாட்டிலேயே தேர்வு எழுத ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Similar News

News March 16, 2025

365 நாட்களுக்கு BSNL அசத்தல் ரீசார்ஜ் ப்ளான்!

image

குறைந்த செலவில் தங்கள் சிம்மை நீண்ட காலத்திற்கு ஆக்டிவாக வைத்திருக்க விரும்பும் பயனர்களுக்கு BSNL ஒரு அசத்தல் திட்டத்தை வழங்கியுள்ளது. ₹1,198க்கு ரீசார்ஜ் செய்தால் (ஒரு நாளைக்கு ₹3.28) 365 நாட்கள் செல்லுபடியாகும். ஒவ்வொரு மாதமும் எந்த நெட்வொர்க்கிற்கும் 300 நிமிடங்கள் வரை இலவசமாக பேசலாம், 30 இலவச SMS, மாதத்திற்கு 3GB டேட்டா பெறலாம். 2வது சிம்மாக BSNL பயன்படுத்துபவர்களுக்கு இது சிறந்த ப்ளானாகும்.

News March 16, 2025

APPLY NOW: இன்றே கடைசி நாள்

image

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் மூலம் வழங்கப்படும் 4 வருட ஆசிரியர் படிப்பில் (ITEP) சேருவதற்கு நடத்தப்படும் NCET எனப்படும் தேசிய பொது நுழைவுத் தேர்விற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க இன்றே (மார்ச் 16) கடைசி நாளாகும். ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 4 ஆண்டுகால ஆசிரியர் படிப்பில் சேர இந்த நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. <>https://exams.nta.ac.in/NCET/<<>>என்ற தளத்தில் விண்ணப்பிக்கவும்.

News March 16, 2025

உக்ரைன் ராணுவ வீரர்கள் ரஷ்ய ராணுவத்தால் சுற்றிவளைப்பு?

image

உக்ரைன் வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் ரஷ்ய ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், குர்ஸ்கில் ஊடுருவிய உக்ரைன் வீரர்களை உயிருடன் புதின் விட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் ஆயுதங்களை போட்டு சரணடைந்தால், உயிருடன் விடுவதாக புதின் கூறியிருந்தார். ஆனால் வீரர்கள் சுற்றிவளைக்கப்படவில்லை என உக்ரைன் மறுத்துள்ளது.

error: Content is protected !!