News March 15, 2025

சொந்தமாக ரயில் வைத்திருந்த ஒரே இந்தியர் இவர்தான்!

image

ரயிலுக்கு சொந்தக்காரர் என்ற வரலாறு கொண்டவர் பஞ்சாப்பின் சம்பூரன் சிங். லூதியானா- சண்டிகர் ரயில் பாதைக்காக அவரது நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால், உரிய இழப்பீடு கிடைக்காததால் அவர் கோர்ட்டை நாடினார். அதில், சதாப்தி ரயிலை ஜப்தி செய்யுமாறு தீர்ப்பளிக்கப்பட்டது. இதனையடுத்து, லூதியானா ஸ்டேஷன் சென்ற அவர் ரயிலின் உரிமையைப் பெற்றார். இருப்பினும், சிறிது நேரத்தில் கோர்ட் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

Similar News

News July 4, 2025

2-வது டெஸ்ட்: 407 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்

image

2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 407 ரன்களில் ஆல் அவுட்டானது. முதலில் தடுமாற்றத்துடன் தொடங்கிய இங்கிலாந்து அணி ஹாரி புரூக்(158) மற்றும் ஜேமி ஸ்மித்தின்(184) 300 ரன்கள் பார்ட்னர்ஷிப்பால் சரிவில் இருந்து மீட்டது. இந்த பார்ட்னர்ஷிப் உடைந்த பின் இங்கிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இந்திய அணி தரப்பில் சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

News July 4, 2025

ஒரு மணி நேரத்தில் 100 மரணங்கள்.. காரணம் என்ன?

image

மிக கொடுமையான விஷயங்களில் ஒன்று தனிமை. தனிமையால் ஒரு மணி நேரத்தில் 100 மரணங்கள் உலகளவில் நடப்பதாக ஒரு அதிர்ச்சி தகவலை உலக சுகாதார அமைப்பு(WHO) வெளியிட்டுள்ளது. 6-ல் ஒருவர் உலகளவில், தனிமையால் உயிரிழப்பதாகவும், கடந்த 2014 – 2013 வரை 8.7 லட்சம் மக்கள் இதனால் மரணத்தை சந்தித்துள்ளதாகவும் WHO தெரிவித்துள்ளது. டீனேஜ் மற்றும் இளைஞர்கள் தனிமையால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 4, 2025

300 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை உடைத்த ஆகாஷ் தீப்

image

கடப்பாரை பேட்டிங்னா இங்கிலாந்துதான் என்பதை நிரூபிப்பது போல் 2-வது டெஸ்டில் ஹேரி புரூக்கும்(158), ஜேமி ஸ்மித்தும்(184) விளையாடினர். 100/5 என்று இருந்த இங்கிலாந்து அணியை இருவரும் சதம் அடித்து, சரிவில் இருந்து மீட்டனர். இந்த பார்ட்னர்ஷிப் 300 ரன்களை கடந்து இந்தியாவுக்கு தலைவலியாக மாறியது. இந்நிலையில் ஆகாஷ் தீப் ஹேரி புரூக்கின் விக்கெட்டை வீழ்த்தி இந்தியாவுக்கு நிம்மதி அளித்தார்.

error: Content is protected !!