News March 15, 2025
விழுப்புரம்: மாணவனை தலையில் அடித்த டீச்சர் சஸ்பெண்ட்

விழுப்புரம் மாவட்டம் வி.அகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கள்ளிகுளத்தை சேர்ந்த மாணவன் சாது சுந்தர், 6ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வகுப்பில் சக மாணவனை தாக்கியதாக, உடற்கல்வி ஆசிரியர் செங்கனி சுந்தரை குச்சியால் அடித்ததாக கூறப்படுகிறது. மாணவனுக்கு கண்பார்வை போய்விட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, ஆசிரியர் செங்கனியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.
Similar News
News September 23, 2025
விழுப்புரம்: வேலைக்கு சென்ற பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகேயுள்ள பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லம்மாள், இன்று (செப்.23) தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஏரி வேலைக்குச் சென்றார். அப்போது அவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த காவல்துறையினர், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News September 23, 2025
விழுப்புரம்: B.E போதும்; ரூ.1.4 லட்சம் சம்பளம்

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <
News September 23, 2025
100 நாள் வேலை நிதி, பாதியாக குறைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த ஆண்டு 1.78 கோடி மனித சக்தி நாட்களுக்கு ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு 50% குறைந்து, 81 லட்சம் வேலை நாட்களுக்கு ரூ.272 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், கிராமப்புற ஏழைகள் 100 நாள் வேலை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். நிதி குறைப்பு காரணமாக, வேலைவாய்ப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.