News March 15, 2025
இலங்கை செல்லும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்கவோடு இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். மேலும், இந்திய நிதி உதவியுடன் சம்பூரில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின் நிலையத்தை அவர் திறந்து வைக்கிறார். 2015ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் 4வது பயணம் இதுவாகும்.
Similar News
News July 4, 2025
அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. திருவள்ளூர், கோவை, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையும்,சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, காஞ்சிபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
News July 4, 2025
போராட்டம் நடத்த தவெகவுக்கு என்ன அவசரம்? ஐகோர்ட்

போலீசுக்கு அழுத்தம் தரவேண்டாம் என தவெக-வுக்கு சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. அனுமதி கேட்டு குறைந்தபட்சம் 15 நாள்கள் முன்பே கடிதம் தரவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. போலீசாருக்கு நிறைய வேலைகள் உள்ளதாக தெரிவித்த கோர்ட் ஆர்ப்பாட்டம் நடத்துவதில் தவெகவுக்கு என்ன அவசரம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. அஜித்குமார் மரணத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி தவெக மனுதாக்கல் செய்திருந்தது.
News July 4, 2025
FLASH: தூத்துக்குடியில் 7-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி வரும் திங்கள்கிழமை(ஜூலை 7) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அந்த மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் இயங்காது. குடமுழுக்கு விழாவையொட்டி மாநிலம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் TNSTC சிறப்புப் பஸ்களை அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.