News April 1, 2024
450 தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்

I.N.D.I.A கூட்டணி 450 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பேசிய அவர், “தேர்தல் பத்திரங்கள் மூலம் வரலாறு காணாத வகையில் பாஜக ஊழல் செய்துள்ளது. அதையும் தாண்டி சிபிஐ, ஐடி போன்ற அமைப்புக்களை வைத்து மிரட்டி பணம் பறிக்கிறார்கள். பாஜகவின் இந்த அராஜகத்துக்கு வரும் தேர்தலில் மக்கள் பதிலடி தருவார்கள்” என்றார்.
Similar News
News December 30, 2025
பொங்கல் பரிசுத் தொகை.. புதிய அறிவிப்பு வெளியானது

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் தங்கள் e-KYC சரிபார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என அரசு அறிவித்திருக்கிறது. இந்த e-KYC-ஐ குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்காவிட்டால், ஜனவரி 1-ம் தேதி முதல் உங்களுக்கு ரேஷன் பொருள்கள் விநியோகம் நிறுத்தப்படலாம். இதனால் பொங்கல் பரிசும் கிடைக்காது என கூறப்படுகிறது. எனவே ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று, e-KYC சரிபார்ப்பை முடிங்க. SHARE.
News December 30, 2025
நாளையே கடைசி.. பான் கார்டு வேலை செய்யாது!

வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆதார் – பான் கார்டை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இணைக்கத் தவறினால், புத்தாண்டு முதல் உங்கள் பான் கார்டு செயல்பாட்டை இழந்துவிடும் (inoperative). மேலும், செயலற்ற பான் எண்ணை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர, ₹1,000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, உடனே பான் – ஆதாரை இணைத்து விடுங்கள். இந்த அத்தியாவசிய பதிவை அனைவருக்கும் பகிருங்கள்.
News December 30, 2025
EPS-க்கு மா.சுப்பிரமணியன் பதிலடி

சிறுவர்கள் கையில் கூட போதைப்பொருள் இருப்பதாக <<18703918>>EPS<<>> விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் மா.சு., EPS முதல்வராக இருந்தபோது தான் TN-ல் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்ததாக குறிப்பிட்டுள்ளார். திமுக ஆட்சி, தமிழகத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றியுள்ளதாக அவர் கூறினார். எங்கேயாவது விற்கப்படுகிறது என்பதை எதிர்க்கட்சியினர் கூறினால், நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


