News March 15, 2025
தவெக செயலாளர் மாரடைப்பால் உயிரிழப்பு

நெல்லை கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளராக இருந்து வந்தவர் சஜி. இவர் இன்று சென்னையில் நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் பொது குழுவில் பங்கேற்க சென்றிருந்தபோது மாரடைப்பினால் உயிரிழந்தார். பொறுப்பேற்று மூன்று மாதம் ஆவதற்குள் அவர் உயிரிழந்தது அவரது கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News April 21, 2025
நெல்லையில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை

திருநெல்வேலியில் செயல்படும் தனியார் சோலார் நிறுவனத்தில் 25 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு இளங்கலை அறிவியல்(BSC) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் மாத ஊதியமாக 25,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
News April 21, 2025
பைக் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

நெல்லை கேடிசி நகரை சேர்ந்தவர் ஜெப்ரின் சாமுவேல் (22). இவர் திருச்சியில் உள்ள பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். நேற்று அவர் தனது இருசக்கர வாகனத்தில் டக்கரம்மாள்புரம் அருகே சென்ற போது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த சாமுவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News April 21, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஏப்.20] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.