News March 15, 2025
பெண்களே.. நாட்டுக்கோழி பண்ணை அமைக்கணுமா?

சுயதொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு வேளாண் பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஏழைப்பெண்களுக்கு நாட்டுக்கோழி பண்ணைகளை அமைத்துக்கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார். சிறு பால் பண்ணைகள் அமைக்க 4% மானியம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
Similar News
News March 16, 2025
மார்ச் 22 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வரும் 22 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது. அதே நேரம் வரும் 20 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
News March 16, 2025
எதிரிகளை நடுங்க வைக்கும் இந்திய ஆயுதம்! (1/2)

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள், அது மாதிரி எதிரிகளை நடுங்க வைக்க ஒரு புதிய ஆயுதத்தை களமிறக்கி இருக்கிறது இந்திய ராணுவம். அதன் பெயர் VMIMS. அதாவது வாகனத்தில் பொருத்தப்பட்ட காலாட்படையின் மோர்டார் சிஸ்டம். ஆயுத பலத்தை அதிகரிக்க சிக்கிமின் மலைப்பகுதிகளில் இதனை நிலை நிறுத்தியிருக்கிறது இந்திய ராணுவம். இதன் சிறப்புகள் என்ன? பார்க்கலாம்….
News March 16, 2025
எதிரிகளை நடுங்க வைக்கும் இந்திய ஆயுதம்! (2/2)

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஆயுதத்தை கடினமான பகுதிகளுக்கும் எளிதாக எடுத்துச் செல்ல முடியும். அதன் துல்லியம், துரித ரியாக்ஷன் ராணுவத்திற்கு கூடுதல் பலம். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனத்தில் 81மிமீ பீரங்கி பொருத்தப்பட்டிருக்கும். இதனால் இதனை ‘ஆர்மடோ’ என அழைக்கின்றனர். கரடு, முரடான பாதைகளில் கச்சிதமாக எடுத்துச் செல்ல முடியும் என்பதால், எதிரிகளை நிச்சயம் நடுங்க வைக்கும்.