News March 15, 2025
பனை, பலா சாகுபடியை ஊக்குவிக்க நிதி!

உழவர்கள் மேம்பாட்டுக்காக ₹10 கோடி மதிப்பில் முந்திரி வாரியம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பனை சாகுபடியை ஊக்குவிக்க பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு ₹1.60 கோடி நிதி ஒதுக்கீடு, பலா மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பலா சாகுபடியை ஊக்குவிக்க ₹5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 4, 2025
உயர்கல்வியில் பின்தங்கும் தமிழகம்

நாட்டிலேயே உயர்கல்வி பயிலும் மாணவர் எண்ணிக்கை அதிகமாக(50%) உள்ளது தமிழகத்தில் தான் என்று பெருமையாக சொல்கிறோம். ஆனால், நாட்டின் டாப் கல்வி நிலையங்கள் தரவரிசையில், முதல் 10 இடங்களில் ஒரே ஒரு நிறுவனம் தான் (மத்திய அரசு நடத்தும் சென்னை ஐஐடி) இடம்பெறுகிறது. தனியார் கல்வி நிறுவனங்களான அம்ரிதா(22), சவீதா (23) ஆகிய இடங்களில் இருக்க, அண்ணா பல்கலை (29-வது), சென்னை பல்கலை(68) பின்தங்கியுள்ளன. உங்க கருத்து?
News September 4, 2025
BIG BREAKING: அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்

அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக சென்னை சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. வரும் 15-ம் தேதிக்குள் பிடிவாரண்ட் ஆணையை செயல்படுத்த வேண்டும் என TN காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. 2007 – 2009 காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ₹1.40 கோடி சொத்து சேர்த்ததாக 2011-ல் DVAC தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகததால் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
News September 4, 2025
விஜய்யின் அடுத்த அரசியல் நகர்வு

மதுரை மாநாட்டை தொடர்ந்து அரசியலில் தனது அடுத்தக்கட்ட நகர்வை விஜய் தொடங்கவுள்ளார். வரும் 13-ம் தேதி விஜய் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சியில் தொடங்கி ஒரு நாளைக்கு கட்சியின் அமைப்பு ரீதியாக 2 மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தவெகவினர் செய்து வருகின்றனர். சுற்றுப்பயணத்திற்காக பிரத்யேக வேனும் தயாராக உள்ளது.