News March 15, 2025
பயிர்க் கடன் தள்ளுபடிக்கு ₹1,472 கோடி ஒதுக்கீடு: அமைச்சர்

2025 – 26 நிதியாண்டில் விவசாயிகளின் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய ₹1,472 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் ₹10,346 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், கரும்பு விவசாயிகளுக்கான சிறப்பு ஊக்கத்தொகை ₹215லிருந்து ₹349ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
Similar News
News September 7, 2025
இந்தியாவிற்கு வர மறுக்கும் PAK மகளிர் அணி

இந்தியாவில் நடைபெற உள்ள ICC மகளிர் ODI உலகக்கோப்பை தொடக்க விழாவை பாக்., மகளிர் அணி புறக்கணிக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வரும் 30-ம் தேதி போட்டி தொடங்க உள்ள நிலையில், இத்தகைய அதிரடி முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ளது. முன்னதாக, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக, பாக்., விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News September 7, 2025
கார்களின் விலையை ₹3.49 லட்சம் குறைத்த டொயோட்டா

GST 2.0 எதிரொலியாக டொயோட்டா நிறுவனம், ₹3.49 லட்சம் வரை கார்களின் விலையை குறைத்துள்ளது. Glanza – ₹85,300, Taisor – ₹1.11 லட்சம், Rumion – ₹48,700, Hyryder – ₹65,400, Crysta – ₹1.8 லட்சம், Hycross – ₹1.15 லட்சம், Fortuner – ₹3.49 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. வரும் 22-ம் தேதி முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வர உள்ளது. முன்னதாக, டாடா, மஹிந்திரா, <<17632758>>ரெனால்ட்<<>> நிறுவனங்கள் விலை குறைப்பை அறிவித்தன.
News September 7, 2025
CM திட்டத்தை புறக்கணிக்கும் வருவாய் அலுவலர்கள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களை புறக்கணிக்கப் போவதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. போதிய கால அவகாசம் வழங்காமல் இரவு, பகலாக பணி செய்ய நிர்பந்திக்கப்படுவதாகவும், வரும் 25-ம் தேதி 40,000 வருவாய் அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், விரைவில் காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கும் என்றும் எச்சரித்துள்ளது.