News March 15, 2025
ஊரகப் பகுதியில் காளான் உற்பத்தி நிலையம்!

புரதச்சத்து நிறைந்த காளான் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதற்காக ஊரகப் பகுதியில் 5 காளான் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். ₹50 கோடியில் வேளாண் விளை பொருட்களுக்கான 100 மதிப்புக்கூட்டு மையங்கள் திறக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
Similar News
News March 15, 2025
மன அழுத்தம் நீங்க இந்த கோவிலுக்கு போங்க

தற்போதைய சூழலில் பலருக்கும் குழப்பம்,மன அழுத்தம் இருந்து வருகிறது தீராத மன அழுத்தம் நீங்க தேனி மாவட்டத்தில் உள்ள இந்த கோவில்களுக்கு செல்லலாம். அனுமந்தன்பட்டியில் உள்ள அனுமன் கோவில், பெரியகுளம் கைலாசநாதர் கோவிகளுக்கு சென்று, அங்கு நடைபெறும் நித்ய பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் மன அழுத்தம் நீங்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது .
News March 15, 2025
தங்கத்தை விட அதிகமாக உயரும் விலை

சர்வதேச சந்தையில் தாமிரத்தின் விலை தங்கத்தை விட வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு ஒரு அவுன்ஸ் தாமிரம் (காப்பர்) நான்கு டாலருக்கு விற்பனையான நிலையில், வெறும் 3 மாதங்களில் அது ஐந்து டாலராக உயர்ந்துள்ளது. அதாவது, சுமார் 25% உயர்வு. இதனுடன் ஒப்பிடுகையில், தங்கத்தின் விலை கடந்த 3 மாதங்களில் 20% மட்டுமே உயர்ந்துள்ளது. இதனால், முதலீட்டாளர்களின் கவனம் காப்பரின் பக்கம் திரும்பியுள்ளது.
News March 15, 2025
சபாநாயகரை சந்தித்தது ஏன்? செங்கோட்டையன் விளக்கம்

சபாநாயகர் அப்பாவுவை அதிமுக EX அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்துப் பேசினார். இபிஎஸ்சுடன் கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்படும் நிலையில் நடந்த சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தொகுதி பிரச்னை தொடர்பாக அப்பாவுவை சந்தித்ததாகவும், சபாநாயகரை எம்எல்ஏக்கள் சந்திப்பது வழக்கமான ஒன்றுதான் என்றார்.