News March 15, 2025

பருத்தி உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம்

image

* பருத்தி உற்பத்தியை அதிகரிக்க ₹12 கோடியில் பருத்தி சாகுபடி திட்டம் * 1 லட்சம் ஏக்கரில் ₹12 கோடியில் மாற்றுப்பயிர் சாகுபடி திட்டம் * ₹15 கோடியில் 7 அரசு விதை சுத்திகரிப்பு நிலையம் * ₹146 கோடி செலவில் இந்த ஆண்டும் ‘முதலமைச்சரின் மன்னுயிர் காப்போம் திட்டம்’ * ₹269 கோடியில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித்திட்டம் 2,335 ஊராட்சியில் செயல்படுத்தப்படும் என, அமைச்சர் அறிவித்துள்ளார்.

Similar News

News March 15, 2025

கொரோனா மாதிரியே புதிய வைரஸ்

image

கொரோனா போலவே மனிதர்களை பாதிக்கக்கூடிய புதிய வைரசினை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வவ்வால்களின் மீது நடத்தப்பட்ட சோதனையில், HKU5-CoV-2 என்ற புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது, 2019ஆம் ஆண்டு உலகைத் தாக்கிய கொரோனா வைரஸ் போலவே தோற்றம் கொண்டிருப்பது, ஆய்வாளர்களை அச்சமடையச் செய்துள்ளது. ஹாங்காங் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், கூடுதல் ஆய்வுகளுக்காக சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

News March 15, 2025

குழந்தையை கைவிடுவோருக்கு என்ன தண்டனை தெரியுமா?

image

குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர்களின் கடமையாகும். இதை தட்டிக்கழித்து, 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கைவிடும் பெற்றோர், பாதுகாவலருக்கு என்ன தண்டனை என்பது குறித்து பிஎன்எஸ் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கைவிடும் பெற்றோர், பாதுகாவலருக்கு குறைந்தது 7 வருட சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது 2 தண்டனைகளும் சேர்த்து விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

News March 15, 2025

43 நாட்டு மக்களுக்கு அமெரிக்கா தடை: ஏன் தெரியுமா?

image

தேச பாதுகாப்பை வலுப்படுத்த, 43 நாடுகளின் பயணிகளுக்கு தடை (அ) கட்டுப்பாடுகள் விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதில் ஆப்கன், கியூபா, ஈரான், லிபியா, வடகொரியா, சோமாலியா, சூடான், சிரியா, வெனிசுவேலா, யேமன் அடங்கிய ‘red list’ நாடுகளின் மக்களுக்கு முழுத் தடையும், ரஷ்யா, பாக்., பெலாரஸ் உள்பட 2-ம் பட்டியல் நாட்டு பயணியருக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும். இந்தியர்களுக்கு இதனால் பாதிப்பு இருக்காது.

error: Content is protected !!