News March 31, 2024
மசாஜ் சென்டரில் வாலிபர் மர்ம மரணம்

அரக்கோணம் தாலுகா பள்ளூர் அடுத்த பாடி கிராமத்தில் மசாஜ் சென்டர் உள்ளது. இந்த மசாஜ் சென்டரில் கடந்த 4 மாதங்களாக ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணகாந்த் (22) மசாஜ் செய்து விட்டு செல்வது வழக்கம். இன்று இரவு 7 மணிக்கு மசாஜ் சென்டரில் திடீரென கிருஷ்ணகாந்த் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை அரக்கோணம் அரசு மருத்துவமனை கொண்டு வந்தனர். டாக்டர் பரிசோதித்ததில் கிருஷ்ணகாந்த் இறந்தது தெரிந்தது.
Similar News
News August 15, 2025
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சுதந்திர தின வாழ்த்து

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் 79வது சுதந்திர தின வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. தேசியக் கொடி, செங்கோட்டை, மற்றும் புறாக்கள் இடம்பெற்ற வாழ்த்து படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. “For People Service” என்ற கோஷத்துடன், காவல்துறை மக்களுடன் இணைந்து சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இந்த நிகழ்வு, மக்கள் மற்றும் காவல்துறை இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
News August 15, 2025
Happy Birthday ராணிப்பேட்டை

தமிழ்நாட்டின் 36வது மாவட்டமாக ராணிப்பேட்டை மாவட்டம் அறிவிக்கப்பட்ட தினம் இன்று. ஆகஸ்ட் 15, 2019 அன்று அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராணிப்பேட்டையை ஒருங்கிணைந்த வேலூரில் இருந்து பிரித்து தனி மாவட்டமாக அறிவித்தார். 7ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நம் ராணிப்பேட்டையில் பல்வேறு தோல் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஷேர் பண்ணுங்க
News August 14, 2025
ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஒளி அலங்காரம்

ராணிப்பேட்டை, 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பல்வண்ண விளக்குகளால் அழகுபடுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் செய்யப்பட்ட இந்த ஒளி அலங்காரம், இரவு நேரத்தில் அலுவலகத்திற்கு சிறப்புத் தந்தது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த அலங்கார ஏற்பாடு, மாவட்டம் முழுவதும் விழா சூழலை ஏற்படுத்தி, மக்களில் கொண்டாட்ட உணர்வை பரவச் செய்தது.