News March 15, 2025
வேளாண் துறையில் தமிழகம் 2வது இடம்

தமிழக பட்ஜெட் நேற்று தாக்கலான நிலையில், இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அப்போது, வேளாண் துறையில் இந்திய அளவில் தமிழகம் 2வது இடத்தில் இருப்பதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும், கேழ்வரகு உற்பத்தியில் தமிழகம் முதலிடத்திலும், கரும்பு உற்பத்தியில் 2ஆம் இடத்திலும், நிலக்கடலை உற்பத்தியில் 3ஆம் இடத்திலும் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
Similar News
News March 16, 2025
டெங்குவால் பள்ளி மாணவி மரணம்

வேலூரில் பள்ளி மாணவி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். மாணவி சிவானி (13) டெங்குவால் பாதிக்கப்பட்டு தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், சிகிச்சை பயனின்றி சிறுநீரகம், கணையம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் செயலிழந்து அவர் உயிரிழந்தார். இதனையடுத்து, மாநிலம் முழுவதும் டெங்கு பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News March 16, 2025
மோகன்லால் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

2019ல் இயக்குநராக அவதாரம் எடுத்த நடிகர் பிரித்விராஜ், மோகன்லாலை வைத்து ‘லூசிபர்’ படத்தை எடுத்தார். அரசியல் கேங்ஸ்டர் பின்னணியில் உருவான அப்படத்தை மலையாளம் மட்டுமல்லாமல், தமிழிலும் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். அதன் 2ஆம் பாகமான ‘எம்புரான்’ வரும் 27ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் எம்புரானுக்கு முன், மீண்டும் ஒருமுறை பார்க்கும் வகையில் வரும் 20ஆம் தேதி லூசிபர் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.
News March 16, 2025
BCCI-யின் கட்டுப்பாடுகள்… கடுப்பான விராட் கோலி

சமீபத்தில் வெளிநாடு மற்றும் உள்நாட்டுத் தொடர்களின் போது, குடும்பத்தினரை கிரிக்கெட் வீரர்கள் தங்களுடன் தங்க வைப்பதற்கு பிசிசிஐ கட்டுப்பாடுகள் விதித்தது. ஆனால், வீரர்களின் மனநிலையை சரியாக புரிந்து கொள்ளாமல் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கோலி சாடியுள்ளார். போட்டியில் தோல்வி கண்டால், சோர்ந்து போய் தனியாக உட்கார யாரும் விரும்பமாட்டார்கள் எனவும் கோலி தெரிவித்துள்ளார்.