News March 15, 2025
அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

விழுப்புரம் நீதிமன்றத்தில் நடந்து வரும் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணை வரும் ஏப்ரல் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வானுார்அடுத்த பூத்துறையில் அரசு செம்மண் குவாரியில், விதிமுறைகளை மீறி செம்மண் எடுத்து அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. வழக்கு விசாரணைக்கு, அரசு தரப்பு சாட்சிகள் ஆஜராகவில்லை. அதையடுத்து, வழக்கு விசாரணை ஏப்ரல் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Similar News
News September 23, 2025
விழுப்புரம்: B.E போதும்; ரூ.1.4 லட்சம் சம்பளம்

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <
News September 23, 2025
100 நாள் வேலை நிதி, பாதியாக குறைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த ஆண்டு 1.78 கோடி மனித சக்தி நாட்களுக்கு ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு 50% குறைந்து, 81 லட்சம் வேலை நாட்களுக்கு ரூ.272 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், கிராமப்புற ஏழைகள் 100 நாள் வேலை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். நிதி குறைப்பு காரணமாக, வேலைவாய்ப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
News September 23, 2025
முதலமைச்சருக்கு ஓவியப் புத்தகம் அனுப்பிய ஓவியர்

விழுப்புரம் சிறுவந்தாடைச் சேர்ந்த ஓவியர் T.R. கோவிந்தராஜன் (87), தனது ஓவியப் புத்தகத்தையும் கடிதத்தையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் கோவிந்தராஜனின் கழகப் பற்றை கண்டு வியந்த முதல்வர், “தமிழ் மண்ணில் தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் திராவிட முன்னேற்றக் கழகம் இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும்” என சமூக வலைதளத்தில் பாராட்டியுள்ளார்.