News March 15, 2025
தமிழக அரசுக்குக் கெடு விதித்த ஜாக்டோ – ஜியோ!

அரசு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த மார்ச் 30ஆம் தேதி வரை ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பு கெடு விதித்துள்ளது. நேற்று பட்ஜெட்டில் அறிவிப்பை எதிர்பார்த்த தங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக JACTO-GEOவின் மூத்த தலைவர் மாயவன் கூறியுள்ளார். வரும் 23ஆம் தேதி மாநிலம் முழுவதும் 6 லட்சம் ஆசிரியர்களை ஒன்று திரட்டி உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News March 15, 2025
அருமையான வேளாண் பட்ஜெட்: முதல்வர் வாழ்த்து

இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டை முதல்வர் ஸ்டாலின் புகழ்ந்துள்ளார். வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவித்தொகை அதிகரிப்பு, 1000 உழவர் நல சேவை மையங்கள், மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம் என பல முத்தான திட்டங்களுடன் ரூ.45,661 கோடி மதிப்பில் வேளாண் பட்ஜெட்டை வடிவமைத்த அமைச்சர், அதிகாரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
News March 15, 2025
பாலிடெக்னிக் மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வு

பாலிடெக்னிக் படிப்பில் இறுதியாண்டு முடித்தும் அரியர்ஸ் வைத்திருக்கும் மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வு நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள <
News March 15, 2025
ரயில்வே தேர்வு எழுத தெலங்கானாவில் மையம்

தெற்கு ரயில்வே பணிக்கான தேர்வில் தமிழக தேர்வர்கள் 90% பேருக்கு தெலங்கானாவில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தெற்கு ரயில்வேயில் 493 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு 2ஆம் கட்டத் தேர்வு மார்ச் 19ல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்வு அருகாமை மையங்களில் நடந்த நிலையில், 2ஆம் கட்ட தேர்வு மையங்கள் 1000 கி.மீ. தொலைவில் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.