News March 15, 2025
தனுஷ்கோடியில் பூநாரை சரணாலயம் ஏன்?

பூநாரை என தமிழில் அழைக்கப்படும் ஃப்ளமிங்கோ பறவைகள் ஆண்டுதோறும் நவம்பர் முதல் மார்ச் வரை தனுஷ்கோடிக்கு அதிக அளவில் வலசை வருகின்றன. சேறு மற்றும் சகதியில் உள்ள பாசிகளை உணவாக உட்கொள்ளும். பல்லுயிர்ப் பெருக்கம் நன்றாக உள்ள இடங்களையே இவை பெரும்பாலும் வலசைக்கு தேர்ந்தெடுக்கும். இதைக் கருத்தில் கொண்டே தனுஷ்கோடியை பூநாரை சரணாலயமாக மாற்ற பட்ஜெட்டில் முடிவு எடுக்கப்பட்டது.
Similar News
News July 5, 2025
வரலாற்றில் இன்று

1954 – பிபிசி தனது முதல் டிவி செய்தியை ஒளிபரப்பியது. 1971 – அமெரிக்காவில் வாக்களிக்கும் வயது 18 ஆகக் குறைக்கப்பட்டது. 1977 – பாகிஸ்தானில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது PM சுல்பிகார் அலி பூட்டோ பதவி இழந்தார். 1996 – குளோனிங் முறையில் டோலி என்ற ஆடு ஸ்காட்லாந்தில் பிறந்தது. 1998 – செவ்வாய்க் கோளுக்கு ஜப்பான் தனது முதலாவது விண்கலத்தை ஏவியது.
News July 5, 2025
தேசிங்கு ராஜா 2 டிரெய்லர்.. செதச்சிட்டீங்க போங்க…

விமல் நடிப்பில் தேசிங்கு ராஜா 2 படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் அதனைப் பார்த்த ரசிகர்கள் அப்செட் ஆகி இருக்கின்றனர். இந்த டிரெய்லர் எவ்ளோ தடவ பாத்தாலும் சிரிப்பே வரல என கமெண்ட் செய்து வருகின்றனர். வித்யாசாகர் இசை தவிர டிரெய்லரில் எதுவும் இல்லை என ரசிகர்கள் ஆதங்கப்படுகின்றனர். தமிழின் சிறந்த காமெடி படங்களில் ஒன்றான தேசிங்கு ராஜா பெயரையாவது விட்டு வச்சிருக்கலாமே..!
News July 5, 2025
IND Vs BAN கிரிக்கெட் தொடர் மாற்றம்?

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து இந்தியா ஆக.17, 20 & 23-ல் ஒருநாள் மற்றும் 26, 29 & 31 ஆகிய நாள்களில் டி20 போட்டிகளில் விளையாட இருந்தது. அங்கு நிலவும் அரசியல் சூழலால் நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அணி வங்கதேசம் செல்ல முடியாத நிலையில், ஏன் வங்கதேச அணியை இந்தியாவுக்கே அழைத்து கொல்கத்தா, ராஞ்சி போன்ற நகரங்களில் தொடரை நடத்தக்கூடாது என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.