News March 15, 2025

திருப்பூர்:பின்னலாடை தொழிற்கான அறிவிப்பு எதுவும் இல்லை

image

தமிழக அரசு பட்ஜெட்டில் பின்னலாடை தொழிலுக்கான அறிவிப்பு இடம்பெறாததால் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநில கோரிக்கையின் போது திருப்பூருக்கு ஏதாவது அறிவிப்பு வருமா என தொழில் துறையினர் காத்திருந்தனர். ஆனால் தமிழக அரசின் பட்ஜெட் ஒட்டுமொத்தமாக தொழில்துறைக்கான அறிவிப்புகள் இடம் பெற்றுள்ள பட்ஜெட்டாக இருக்கிறது. ஆனால் தனியாக பின்னலாடை தொழிலில் உள்ள நிறுவனங்களின் கோரிக்கைகள் இடம் பெறவில்லை என தெரிவித்தனர்.

Similar News

News March 15, 2025

தமிழகத்தில் திருப்பூர் முதலிடம் பெற்று சாதனை!

image

2024 -ம் ஆண்டின் உலக காற்றுத் தர அறிக்கையில், IQAir நிறுவனம் வெளியிட்ட பட்டியலில், குறைந்த காற்று மாசுபட்ட நகரங்களில் திருப்பூர் இடம் பெற்று தமிழ்நாட்டிலேயே திருப்பூர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. அதுமட்டுமில்லாமல் திருப்பூர் தெற்கு ஆசியாவில் 15- வது இடமும், இந்தியாவில் 3-வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது. இச்சாதனைக்கு ‘வனத்துக்குள் திருப்பூர்’ பங்கு முக்கியமானது குறிப்பிடதக்கது.

News March 15, 2025

திருப்பூர் அருகே கொலை: வாக்குமூலம் 

image

அவினாசியை அடுத்த துலுக்கமுத்தூர் ஊராட்சி ஊஞ்சப்பாளையம் பெரிய தோட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி(85).விவசாயி. இவரது மனைவி பர்வதம் (75). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.கொலை தொடர்பாக அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இவ் வழக்கில் உறவினரான ரமேஷ் என்பவரை தகாத வார்த்தைகளால்  திட்டியதால் கொலை செய்ததாக தெரிவித்தார்.

News March 15, 2025

10ம் வகுப்பு பொதுத்தேர்வு; தயாராகும் கல்வித்துறை

image

திருப்பூரில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ல் தொடங்கி ஏப்ரல் 15 வரை நடக்கிறது. மாவட்டத்தில் 30,235 மாணவர்கள், 1,097 தனித்தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர். 108 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. 1,780 கண்காணிப்பாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஹால் டிக்கெட் www.dge.tn.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு மையத்திலோ அல்லது ஒரு நாள் முன்பே பெறலாம்.

error: Content is protected !!