News March 15, 2025
இன்று முதல் வெயில் சுட்டெரிக்கும்

தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை இயல்பை விட 3°C அதிகமாக இருக்கக்கூடும் என IMD கணித்துள்ளது. வட மாவட்டங்களில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் நேற்று 38°C மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பால், வெளியில் செல்லும் பொதுமக்களுக்கு அசெளகரியம் ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
Similar News
News March 15, 2025
அவியல், கூட்டு போல வேளாண் பட்ஜெட்: இபிஎஸ்

விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட் என எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் விமர்சித்துள்ளார். 5வது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தும், விவசாயிகளுக்கு என்ன பலன் கிடைத்தது? என கேள்வி எழுப்பிய அவர், விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுகவினர் வல்லவர்கள் என்றும் சாடியுள்ளார். பல்வேறுத் துறைகளை ஒன்றிணைத்து அவியல், கூட்டு போன்று இந்த பட்ஜெட்டை தயாரித்துள்ளார்கள் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
News March 15, 2025
தவெக நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் சஜி காலமானார்

TVKவில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தில் தென் மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வந்த அவரை அங்கீகரிக்கும் வகையில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சென்னையில், வரும் 28ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதால் அது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க சென்றபோது உயிர் பிரிந்தது. #RIP
News March 15, 2025
IS அமைப்பின் முக்கியத் தலைவரை காலி செய்த ஈராக்

ஈராக் மற்றும் அமெரிக்கப் படைகள் கூட்டாக நடத்திய தாக்குதலில், ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவரான அபு கதீஜா கொல்லப்பட்டார். உலக அளவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட அவர், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஈராக் மற்றும் சிரியா தலைவராக செயல்பட்டு வந்துள்ளார். இதனிடையே, பயங்கரவாத சக்திகளுக்கு எதிரான தங்கள் போராட்டம் தொடர்வதாக ஈராக் பிரதமர் முகமது சூடானி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.