News March 15, 2025
இந்த விவசாயிகளுக்கு மட்டும் உதவித் தொகை

விருதுநகர் மாவட்டத்தில் 51,681 பயனாளிகள் பிரதம மந்திரியின் விவசாயிகள் கௌரவ நிதித் தொகையினை பெற்று வருகின்றனர். ஆனால் 22,258 விவசாயிகள் மட்டுமே தனித்துவ அடையாள எண் பெற பதிவு செய்துள்ளனர். விவசாயிகள் இ-சேவை மையங்களில் தங்களின் நில உடமைகளை இலவசமாக பதிவு செய்யலாம். மீதமுள்ள 29,423 விவசாயிகள் மார்ச்.31க்குள் நில உடமைகளை பதிவு செய்து அடையாள எண் பெற்று பயனடைய வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 14, 2025
விருதுநகரில் புகார் அளிக்க எண் வெளியீடு

விருதுநகர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக குறைதீர்ப்பு அலுவலராக ஜெயபிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களிடமிருந்து வரும் புகார்களை பெற்று, பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் 8925811346 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
News September 14, 2025
விருதுநகர்: மழைக்காலத்தில் ஒரு மெசேஜ் போதும்!

விருதுநகர் மக்களே உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், விருதுநகர் மாவட்ட மக்கள் 8903331912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். மறக்காம SHARE பண்ணுங்க!
News September 14, 2025
விருதுநகர் மக்களே; இன்றே கடைசி நாள்!

விருதுநகர் மக்களே; மத்திய அரசின் புலனாய்வு துறையில் புலனாய்வு அதிகாரிக்கான காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு B.sc முடித்திருந்தால் போதும். இதற்கு மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கே <