News March 15, 2025
பவன் கல்யாணுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி

மும்மொழிக் கொள்கை குறித்த ஆந்திர துணை முதல்வர் <<15763979>>பவன் கல்யாணின்<<>> கருத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள்” என்று கூறுவது மற்றொரு மொழியை வெறுப்பதாகாது என்று பதிலடி கொடுத்துள்ளார். இது நமது தாய்மொழியையும், தாயையும் சுயமரியாதையுடன் பாதுகாக்கும் முயற்சி என்பதை யாராவது பவன் கல்யாணிடம், எடுத்துச் சொல்லுங்கள் என கேட்டுக் கொண்டார்.
Similar News
News March 15, 2025
சந்தனம், செம்மரம் வளர்க்க புதிய கொள்கை!

உழவர்கள் கூடுதல் வருவாய் ஈட்டும் வகையில், உயர் மதிப்புமிக்க சந்தனம், செம்மரம், மகோகனி, ஈட்டி மர வகைகளை வளர்க்கும் நடைமுறைகள் எளிதாக்கப்படும் என வேளாண் அமைச்சர் உறுதியளித்துள்ளார். இந்த மரங்களை வளர்ப்பது, பதிவு செய்வது, வெட்டி விற்பனைக்கு எடுத்துச்செல்வது ஆகியவை இதன் மூலம் எளிதாகும் எனவும், இதற்காக தமிழ்நாடு வேளாண் காடுகள் கொள்கை வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 15, 2025
வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு….

வேளாண் பட்ஜெட்டில் சிறு, குறு விவசாயிகளுக்கான அசத்தலான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இ-வாடகை செயலி மூலமாக சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் 130 வேளாண் வாடகை மையங்கள் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
News March 15, 2025
உழவர்களுக்கு வெளிநாட்டுச் சுற்றுலா!

ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் கடைபிடிக்கப்படும் உயரிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள 100 முன்னோடி விவசாயிகள், அந்நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அங்குள்ள தொழில்நுட்பங்களை கண்டுணர்ந்து, தங்களது வயல்களில் அமல்படுத்த ஏதுவாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ₹2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.