News March 15, 2025

போக்சோ வழக்கு: Ex CM-க்கு எதிரான சம்மன் நிறுத்திவைப்பு!

image

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கர்நாடகா Ex CM எடியூரப்பா மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மார்ச் 15ம் தேதி நேரில் ஆஜராக எடியூரப்பா உட்பட 4 பேருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதனை எதிர்த்து ஐகோர்ட்டில் எடியூரப்பா தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், 4 பேரும் ஆஜராகும் சம்மனை நிறுத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News March 15, 2025

மனைவியின் ஆபாச சேட்… கோர்ட் அதிரடி தீர்ப்பு

image

ஆண் நண்பருடன் மனைவி ஆபாச Chat செய்வதை ஒரு கணவனால் எப்படி சகித்துக் கொள்ள முடியும் என ம.பி ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. கணவருடனான செக்ஸ் வாழ்க்கை குறித்து ஆண் நண்பரிடம் பகிர்வது, மனைவி மன ரீதியாக கொடுக்கும் கொடுமை என்றே கருத முடியும் எனவும் தெரிவித்துள்ளது. கணவர்தான் தனது மொபைலை ஹேக் செய்தது, ஆபாச மெசேஜ்களை அனுப்பியதாக மனைவியின் குற்றச்சாட்டையும் நிராகரித்து டைவர்ஸ் வழங்கியுள்ளது.

News March 15, 2025

CT வெற்றிக்கு மூவரே காரணம்: ரிக்கி பாண்டிங்

image

சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்வதற்கு முக்கிய காரணம் 3 ஆல் ரவுண்டர்கள்தான் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ஹர்திக், அக்‌ஷர், ஜடேஜா போன்ற திறன்மிக்க மூவர் அணியில் இருந்ததால்தான் இந்தியாவுக்கு இந்த வெற்றி சாத்தியமானது என்றும் அவர் கூறியுள்ளார். போதுமான வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை என்ற குறை, வெளியில் தெரியவே இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News March 15, 2025

போர் நிறுத்தம்: PM மோடிக்கு நன்றி கூறிய புதின்

image

போர் நிறுத்தம் குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்த ரஷ்ய அதிபர் புதின், இந்த உன்னத பணிக்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். உக்ரைனுடனான மோதலை நிறுத்த தீவிர கவனம் செலுத்தியதற்காக டிரம்பிற்கும் நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். போரை முடிவுக்கு கொண்டு வர, புதினிடம் பிரதமர் மோடி பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!