News March 14, 2025
நாளை தேர்வு எழுத முடியாதா… சிபிஎஸ்இ மீண்டும் வாய்ப்பு

ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. மேலும் சில மாநிலங்களில் நாளை (மார்ச் 15) கொண்டாடப்படவுள்ளது. இதனால் நாளை நடைபெறவுள்ள சிபிஎஸ்இ இந்தித் தேர்வுகளில் அந்த மாநில மாணவர்களால் பங்கேற்க முடியாது. அத்தகைய மாணவர்கள் பயப்படத் தேவையில்லை, தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்காக நடத்தப்படும் சிறப்புத் தேர்வுகளின்போது இவர்கள் அந்த தேர்வுகளை எழுதலாம் எனக் கூறியுள்ளது.
Similar News
News March 15, 2025
தமிழகத்தில் ஒவ்வொரு நபருக்கும் ₹1.32 லட்சம் கடன்

TN அரசின் கடன் வரும் நிதியாண்டில் ₹9.30 லட்சம் கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. இக்கடனை ரேஷன் கார்டுதாரர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிட்டால், தலா ஒரு குடும்பத்துக்கு ₹4.13 லட்சம் கடன் இருக்கும். TNல் தற்போது, 2.25 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. அதில், 7.03 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். அதன் அடிப்படையில், தனி நபருக்கு கணக்கிட்டால் ஒவ்வொரு நபருக்கும் தலா ₹1.32 லட்சம் கடன் உள்ளது.
News March 15, 2025
இன்று முதல் வெயில் சுட்டெரிக்கும்

தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை இயல்பை விட 3°C அதிகமாக இருக்கக்கூடும் என IMD கணித்துள்ளது. வட மாவட்டங்களில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் நேற்று 38°C மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பால், வெளியில் செல்லும் பொதுமக்களுக்கு அசெளகரியம் ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
News March 15, 2025
WPL: இறுதிப் போட்டியில் வெல்லப்போவது யார்?

இன்று நடைபெறும் WPL இறுதிப் போட்டியில் DC vs MI அணிகள் மோதுகின்றன. இம்முறை கோப்பை வெல்லும் முனைப்பில் டெல்லியும், இரண்டாவது முறையாக கோப்பை வெல்லும் ஆர்வத்தில் மும்பையும் உள்ளது. ஆல்ரவுண்டர்களான நாட் சீவர், ஹெய்லி மேத்யூஸ் ஆகியோருடன் MI அணி வலுவாக உள்ளது. இந்த சீசனில் மும்பையை டெல்லி ஆதிக்கம் செலுத்தியது. போட்டி இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. JioHotstar, ஸ்டார் ஸ்போர்ட்ஸில் நேரலையில் காணலாம்.