News March 14, 2025
ஸ்மார்ட் மீட்டர் எப்படி செயல்படும் தெரியுமா? (1/2)

தற்போது வீடுகளில் இருப்பவை டிஜிட்டல் எல்க்ட்ரிசிட்டி மீட்டர் ஆகும். இதை மாற்றிவிட்டு, தமிழகம் முழுவதும் 3.05 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த தமிழக அரசு திட்டமிட்டு, டெண்டர் கோரியுள்ளது. மின்சார வாரியத்தில் நிலவும் ஆள் பற்றாக்குறையால், 2 மாதங்களுக்கு ஒருமுறை தற்போது மின் கணக்கீடு எடுக்கப்படுகிறது. ஆனால் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டால், தானாகவே மின் பயன்பாட்டை அந்த மீட்டர் கணக்கிடும்.
Similar News
News March 15, 2025
ஒருபோதும் USAவின் அங்கமாக இருக்க மாட்டோம்: கனடா PM

கனடாவின் புதிய பிரதமரான மார்க் கார்னி, பதவியேற்ற முதல் நாளிலேயே தனது முத்திரையை பதித்துள்ளார். கனடா ஒருபோதும் அமெரிக்காவின் அங்கமாக இருக்காது என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். எனினும், நாட்டின் நலன்களுக்காக டிரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், கனடாவை அமெரிக்காவின் ஒரு அங்கமாக மாற்றுமாறு கேட்டுக் கொண்டார்.
News March 15, 2025
வீட்டு, சமையல் வேலைக்கு 1 மணி நேரம் ரூ.49 தான்

தனியார் நிறுவனமான அர்பன் கம்பெனி வீட்டு வேலை, சமையல் வேலை வாடகைப் பணியாளர் சேவைகளை மும்பையில் சோதனை முயற்சியில் அறிமுகம் செய்துள்ளது. இதில் விண்ணப்பித்தால், 15 நிமிடங்களில் வேலைக்கு ஆட்கள் வருவர். அவர்களுக்கு 1 மணி நேரத்திற்கு ரூ.49 அளிக்க வேண்டும். இது அறிமுக சலுகையே. பிறகு ரூ.245 ஆகும். மும்பையைத் தொடர்ந்து பிற நகரங்களுக்கும் சேவை விரிவுபடுத்தப்படக்கூடும் எனக் கூறப்படுகிறது.
News March 15, 2025
பவன் கல்யாணுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி

மும்மொழிக் கொள்கை குறித்த ஆந்திர துணை முதல்வர் <<15763979>>பவன் கல்யாணின்<<>> கருத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள்” என்று கூறுவது மற்றொரு மொழியை வெறுப்பதாகாது என்று பதிலடி கொடுத்துள்ளார். இது நமது தாய்மொழியையும், தாயையும் சுயமரியாதையுடன் பாதுகாக்கும் முயற்சி என்பதை யாராவது பவன் கல்யாணிடம், எடுத்துச் சொல்லுங்கள் என கேட்டுக் கொண்டார்.