News March 31, 2024
உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்களுக்கு ஆளுநர் ஆறுதல்

புதுச்சேரி வசந்தம் நகரில் இன்று வாய்க்கால் தூர்வாரும் பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் காயமடைந்த மூன்று தொழிலாளர்கள் புதுச்சேரி அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களை புதுச்சேரி ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
Similar News
News August 15, 2025
சுதந்திர தினம் – புதுச்சேரி முதல்வர் வாழ்த்து

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள செய்தியில், “அனைவருக்கும் எனது அன்பான சுதந்திரதின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சுதந்திரப் போராட்ட வீரர்களின் அயராத உழைப்பாலும், ஈடு இணையற்ற தியாகங்களாலும் நாம் பெற்ற சுதந்திரத்தின் அடையாளமாக ஒவ்வொரு வீட்டிலும் நாம் ஏற்றியுள்ள மூவர்ணக் கொடி, நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் உறுதிப்பாட்டின் கலங்கரை விளக்கமாகும்.” என கூறியுள்ளார்
News August 15, 2025
புதுச்சேரி: யார் இந்த பிரெஞ்சு காந்தி?

புதுச்சேரி சுதந்திரப் போராட்ட வீரர்களின் பட்டியலில் ஒரு சிறந்த ஆளுமை, 1884 ஆம் ஆண்டு காரைக்காலுக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவரான எஸ்.அரங்கசாமி நாயக்கர் ஆவார். இவர், வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகத்தில் அவரின் பங்களிப்பு மிக முக்கியமானது. காந்தியின் கொள்கைகளை அவர் தனது வாழ்நாள் முழுவதும் பின்பற்றியதால், அவர் பிரெஞ்சு காந்தி என்று அழைக்கப்பட்டார். இத்தகவை அனைவருக்கு SHARE செய்ங்க
News August 14, 2025
புதுவை : மனநிம்மதியை தரும் எகிப்திய நடராஜர்

புதுச்சேரியில் உள்ள புதுக்குப்பம் கடற்கரையில் அமைந்துள்ள கர்ணேஷ்வர் நடராஜர் கோயில், பிரமிடு வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. இது எகிப்திய பிரமிடுகள் மற்றும் இந்தியாவின் பாரம்பரிய கோயில் பாணியின் கலவையாக காட்சியளிக்கிறது. இக்கோயிலில் இருக்கும் ஏழு படிகள் உணர்தலைக் குறிப்பதாக கூறுகின்றனர். இக்கோவிலுக்கு சென்று வழிபட்டால் மனநிம்மதி கிடைக்கும் என நம்பபடுகிறது. இதனை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்!