News March 14, 2025

மீனவர்களுக்கு ரூ.8,000 மானியம் அறிவிப்பு

image

தமிழக பட்ஜெட்டில் மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களுக்கான நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசின் பங்களிப்பான ரூ.1,500 மற்றும் மாநில அரசின் கூடுதல் பங்களிப்பான ரூ.6,500 என மொத்தம் ரூ.8,000 நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கை மீனவர்களால் பறிமுதல் செய்யப்பட்டு, நீண்டகாலமாக மீட்கப்படாத விசைப் படகுகளுக்கான நிவாரணம் ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Similar News

News March 15, 2025

பட்ஜெட் அதிருப்தி – போராட்டம் அறிவித்த ஜாக்டோ ஜியோ

image

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதே ஜாக்டோ ஜியோ அமைப்பின் நீண்ட கால கோரிக்கை. பட்ஜெட்டில் அதுதொடர்பாக அறிவிப்பு எதுவும் இடம்பெறாததால் அதிருப்தி அடைந்த அவர்கள், உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். மாவட்டத் தலைநகரங்களில் மார்ச் 23-ல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், மார்ச் 30-ல் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

News March 15, 2025

ஒருபோதும் USAவின் அங்கமாக இருக்க மாட்டோம்: கனடா PM

image

கனடாவின் புதிய பிரதமரான மார்க் கார்னி, பதவியேற்ற முதல் நாளிலேயே தனது முத்திரையை பதித்துள்ளார். கனடா ஒருபோதும் அமெரிக்காவின் அங்கமாக இருக்காது என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். எனினும், நாட்டின் நலன்களுக்காக டிரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், கனடாவை அமெரிக்காவின் ஒரு அங்கமாக மாற்றுமாறு கேட்டுக் கொண்டார்.

News March 15, 2025

வீட்டு, சமையல் வேலைக்கு 1 மணி நேரம் ரூ.49 தான்

image

தனியார் நிறுவனமான அர்பன் கம்பெனி வீட்டு வேலை, சமையல் வேலை வாடகைப் பணியாளர் சேவைகளை மும்பையில் சோதனை முயற்சியில் அறிமுகம் செய்துள்ளது. இதில் விண்ணப்பித்தால், 15 நிமிடங்களில் வேலைக்கு ஆட்கள் வருவர். அவர்களுக்கு 1 மணி நேரத்திற்கு ரூ.49 அளிக்க வேண்டும். இது அறிமுக சலுகையே. பிறகு ரூ.245 ஆகும். மும்பையைத் தொடர்ந்து பிற நகரங்களுக்கும் சேவை விரிவுபடுத்தப்படக்கூடும் எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!