News March 14, 2025

தூத்துக்குடி: 403 கிராம பஞ்சாயத்திற்கும் ஆட்சியர் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 403 கிராம ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் கிராம ஊராட்சிக்கு 2024-2025 ஆம் நிதியாண்டிற்கு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 172, 174 மற்றும் 242 இன் படி வரி செலுத்த வேண்டும். எனவே சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் உட்பட அனைத்து வரிகளையும் மார்ச்.31க்குள் ஊராட்சி அலுவலகத்தில் கட்ட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். *நண்பர்களுக்கு பகிரவும்*

Similar News

News March 3, 2026

தூத்துக்குடி: ஆட்டோ கவிழ்ந்து சம்பவ இடத்திலேயே பலி

image

ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் செந்தில்குமார் (54) ஆட்டோவில் சவாரியாக நாசரேத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மேல புதுக்குடி அருகே சென்றபோது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 3, 2026

தூத்துக்குடி: 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்!

image

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான சுந்தரபாண்டி (21) மற்றும் தருவைகுளம் பகுதியில் நடந்த கஞ்சா கடத்தல் வழக்கில் தொடர்புடைய கட்ட முருகன் (31) ஆகிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை தடுப்பு காவல் சிறையில் அடைத்தனர்.

News March 3, 2026

குண்டர் சட்டத்தின் கீழ் இரண்டு பேர் கைது

image

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான சுந்தரபாண்டி (21) மற்றும் தருவைகுளம் பகுதியில் நடந்த கஞ்சா கடத்தல் வழக்கில் தொடர்புடைய கட்ட முருகன் (31) ஆகிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை தடுப்பு காவல் சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!