News March 14, 2025
‘டாஸ்மாக்கில் எந்த ஊழலும் நடைபெறவில்லை’

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். டாஸ்மாக் டெண்டரில் எந்த ஊழலும், முறைகேடும் நடைபெறவில்லை. தமிழக அரசுக்கு எதிராக ED-ஐ மத்திய அரசு உள்நோக்கத்துடன் ஏவியுள்ளது. எந்தக் குற்றச்சாட்டையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
Similar News
News March 15, 2025
சிறப்பு கொள்முதல் முறை… ரத்து செய்தது டாஸ்மாக்

குடோன்களில் இருப்பு நிலவரத்தை வைத்து மாவட்ட மேலாளர்களே மதுபான நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் கொடுக்கும் சிறப்பு கொள்முதல் முறையை டாஸ்மாக் நிர்வாகம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. விற்பனையை அடிப்படையாக வைத்து இனி கொள்முதல் செய்யவும் முடிவு செய்துள்ளது. போதிய வரவேற்பு இல்லாத போதும் சில மதுபான நிறுவனங்களுக்கு அதிக ஆர்டர்கள் தரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
News March 15, 2025
கிரேட் சார் நீங்க..

தெலங்கானாவில் 80 வயதான ஓய்வு பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர் பால் ரெட்டிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. 1970 முதல் 2004 வரை ஆசிரியராக பணியாற்றிய அவர், தற்போதும் கற்பிப்பதை நிறுத்தவில்லை. அரசுப் பள்ளிகளில் தெலுங்கு, கணிதம், ஆங்கிலம் கற்பித்து வருகிறார். தினமும் தனது சொந்த செலவில் 15 கி.மீ பயணித்து, ஒரு ரூபாய் கூட காசு வாங்காமல் மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்து வருகிறார்.
News March 15, 2025
கொலை மிரட்டல் வந்தது… வருண் சக்கரவர்த்தி ஷாக் பேட்டி

டி20 உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு தனக்கு கொலை மிரட்டல் வந்ததாக வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக செயல்பட்ட அவர், 2021 டி20 உலகக் கோப்பையில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. இதை சுட்டிக்காட்டி, தனக்கு இந்தியாவுக்கு வரக்கூடாது என மிரட்டல் விடுத்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், சிலர் பைக்கில் தன்னை துரத்தியதாகவும் கூறியுள்ளார்.