News March 14, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்நிலையில் மார்ச்.18ஆம் தேதி கும்பகோணத்திலும், 25ஆம் தேதி பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகம் எதிரே உள்ள கிராம சபை கட்டடத்திலும் நடைபெற உள்ளது. தகுதி உடையவர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 14, 2025
தஞ்சை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற Way2News!

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், Way2News சார்பில் சுரேஷ், சிங்காரவேலு, மதன் ஆகியோர் கலந்து கொண்டு தஞ்சை பகுதியைச் சேர்ந்த சுமார் 8 இளைஞர்களை தேர்வு செய்தனர். இதையடுத்து, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணி ஆணை, மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் பரமேஸ்வரி தலைமையில் வழங்கப்பட்டது.
News March 14, 2025
பாபநாசம் எம்.எல்.ஏ.வுக்கு ஓராண்டு சிறை

தஞ்சாவூர், வெளிநாட்டில் இருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெறப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் மனித நேய மக்கள் கட்சி தலைவரும், பாபநாசம் எம்எல்ஏவுமான ஜவஹிருல்லாவிற்கு ஓராண்டு சிறை தண்டைனையை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
News March 14, 2025
தஞ்சை மாவட்டத்திற்கு முக்கிய அறிவிப்புகள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை வாசித்து வருகிறார். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் புதிய அரசு கலைக் கல்லூரி, தஞ்சையில் அன்புச்சோலை மையம், தஞ்சை நடுவூரில் தொழிற்பேட்டை, தஞ்சை கைவினை கலைஞர்களுக்காக பொதுவசதி மையங்கள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் பல அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தஞ்சை மக்களே SHARE பண்ணுங்க..