News March 14, 2025

சென்னைக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள்…

image

சென்னை அருகே 2,000 ஏக்கரில் உலகத்தர வசதிகளுடன் புதிய நகரம். வேளச்சேரியில் புதிய பாலம் அமைக்க ₹310 கோடி. திருவான்மியூர் – உத்தண்டி 4 வழித்தட உயர்மட்ட சாலை அமைக்க ₹2,100 கோடி. ₹100 கோடியில் சென்னை அறிவியல் மையம். வண்ணாரப்பேட்டை, கிண்டியில் பன்முகப் போக்குவரத்து முனையம். குடிநீர் விநியோகிக்க ₹2,423 கோடி. மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் அமைக்க ரூ.88 கோடி என பல திட்டங்கள் அறிவிப்பு.

Similar News

News March 14, 2025

குட் பேட் அக்லி இன்னொரு பாட்ஷாவா? – கதை இதுதானாம்!

image

அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி பட்டையை கிளப்பிய நிலையில், படத்தின் கதை என்னவென்று இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. அதாவது, கொடூரமான டானாக இருந்த AK, வன்முறையை கைவிட்டு அமைதியான வாழ்க்கைக்கு திரும்புகிறாராம். ஆனால், கடந்த காலத்தில் செய்த செயல்கள் அவரை மீண்டும் துரத்துகிறதாம். அதனை ஏகே எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை என சொல்லப்படுகிறது. பாட்ஷா படம் மாதிரி இருக்குல்ல…

News March 14, 2025

ஸ்மார்ட் மீட்டர் எப்படி செயல்படும் தெரியுமா? (1/2)

image

தற்போது வீடுகளில் இருப்பவை டிஜிட்டல் எல்க்ட்ரிசிட்டி மீட்டர் ஆகும். இதை மாற்றிவிட்டு, தமிழகம் முழுவதும் 3.05 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த தமிழக அரசு திட்டமிட்டு, டெண்டர் கோரியுள்ளது. மின்சார வாரியத்தில் நிலவும் ஆள் பற்றாக்குறையால், 2 மாதங்களுக்கு ஒருமுறை தற்போது மின் கணக்கீடு எடுக்கப்படுகிறது. ஆனால் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டால், தானாகவே மின் பயன்பாட்டை அந்த மீட்டர் கணக்கிடும்.

News March 14, 2025

ஸ்மார்ட் மீட்டர் எப்படி செயல்படும் தெரியுமா? (2/2)

image

மாத கடைசியில் மின்பயன்பாட்டை கணக்கிடும் ஸ்மார்ட் மீட்டர், அதை பில்லாக்கி, மின்சார வாரியத்தில் பயனாளர்கள் அளித்துள்ள செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கும். அதில் கட்ட வேண்டிய தொகையுடன், கட்டணத்தை செலுத்த வேண்டிய கடைசி தேதியும் இருக்கும். இதுபோல மாதா மாதம் ஸ்மார்ட் மீட்டர் பில்லை உருவாக்கி, எஸ்எம்எஸ்ஆக அனுப்பும். இதன்மூலம் மாதந்தோறும் கணக்கெடுப்பு முறை அமலாகும்.

error: Content is protected !!