News March 14, 2025
கேரள CM பினராயி விஜயனுக்கு நேரில் அழைப்பு

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னையில் வரும் 22 ஆம் தேதி நடக்கும் கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் பங்கேற்க, கேரள CM பினராயி விஜயனுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. திருவனந்தபுரத்தில் அவரை நேரில் சந்தித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திமுக MP தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் அழைப்பு விடுத்தனர். இந்த விவகாரத்தில் தமிழகத்திற்கு வலுவான ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக பினராயி விஜயன் உறுதியளித்தார்.
Similar News
News March 15, 2025
தனுஷ்கோடியில் பூநாரை சரணாலயம் ஏன்?

பூநாரை என தமிழில் அழைக்கப்படும் ஃப்ளமிங்கோ பறவைகள் ஆண்டுதோறும் நவம்பர் முதல் மார்ச் வரை தனுஷ்கோடிக்கு அதிக அளவில் வலசை வருகின்றன. சேறு மற்றும் சகதியில் உள்ள பாசிகளை உணவாக உட்கொள்ளும். பல்லுயிர்ப் பெருக்கம் நன்றாக உள்ள இடங்களையே இவை பெரும்பாலும் வலசைக்கு தேர்ந்தெடுக்கும். இதைக் கருத்தில் கொண்டே தனுஷ்கோடியை பூநாரை சரணாலயமாக மாற்ற பட்ஜெட்டில் முடிவு எடுக்கப்பட்டது.
News March 15, 2025
₹2,000 போதும்.. மாதம் முழுவதும் ஏசி பஸ்களில் ப்ரீ

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 630 வழித்தடங்களில் 3,056 பஸ்களை MTC இயக்குகிறது. இதில் நாள்தோறும் 32 லட்சம் பேர் பயணிப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது. தற்போது இந்த பஸ்களில் ₹1,000 பாஸ் இருந்தால், ஒரு மாதத்திற்கு பயணிக்கலாம். ஆனால் ஏசி பஸ்களில் செல்ல முடியாது. இதை கருத்தில் கொண்டு, ஏசி உள்ளிட்ட அனைத்து பஸ்களிலும் பயணிக்க ₹2,000 பாஸை விரைவில் MTC அறிமுகம் செய்யவுள்ளது.
News March 15, 2025
IND கிரிக்கெட்டின் ஒரு அங்கம் ஐபிஎல்: தினேஷ் கார்த்திக்

IPL இந்திய கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்தியுள்ளதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். வீரர்களுக்குள் இருக்கும் வெற்றிக்கான மனநிலையை இத்தொடர் வெளிக்கொண்டு வந்துள்ளதாகவும், இதில் கிடைக்கும் பொருளாதார பலன்கள் கிரிக்கெட்டை மேம்படுத்த உதவுவதாகவும் தெரிவித்துள்ளார். IND கிரிக்கெட்டின் ஒரு அங்கமாக IPL இருப்பதால், ஒரே நேரத்தில் 3 அணிகளை இந்தியாவுக்காக விளையாட வைக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.