News March 14, 2025
கேரள CM பினராயி விஜயனுக்கு நேரில் அழைப்பு

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னையில் வரும் 22 ஆம் தேதி நடக்கும் கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் பங்கேற்க, கேரள CM பினராயி விஜயனுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. திருவனந்தபுரத்தில் அவரை நேரில் சந்தித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திமுக MP தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் அழைப்பு விடுத்தனர். இந்த விவகாரத்தில் தமிழகத்திற்கு வலுவான ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக பினராயி விஜயன் உறுதியளித்தார்.
Similar News
News March 15, 2025
‘ஹனி டிராப்’ மூலம் இந்திய ராணுவ ரகசியங்களை பெற்ற ISI

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கு கசியவிட்டதாக ஆயுத தொழிற்சாலையில் பணியாற்றும் ரவீந்திரநாத் என்பவரை உ.பி போலீசார் கைது செய்தனர். பெண்களை வைத்து மயக்கும் ‘ஹனி டிராப்’ முறையில், இந்த ஊழியரிடமிருந்து ரகசியங்களை ஐ.எஸ்.ஐ., அமைப்பு பெற்றது அம்பலமாகி உள்ளது. ‘பேஸ்புக்’ வாயிலாக ரவீந்திரநாத்தை தொடர்பு கொண்ட நேஹா சர்மா என்ற பெண், இந்திய ராணுவ ரகசியங்களை பெற்றுள்ளார்.
News March 15, 2025
தமிழக அரசுக்குக் கெடு விதித்த ஜாக்டோ – ஜியோ!

அரசு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த மார்ச் 30ஆம் தேதி வரை ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பு கெடு விதித்துள்ளது. நேற்று பட்ஜெட்டில் அறிவிப்பை எதிர்பார்த்த தங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக JACTO-GEOவின் மூத்த தலைவர் மாயவன் கூறியுள்ளார். வரும் 23ஆம் தேதி மாநிலம் முழுவதும் 6 லட்சம் ஆசிரியர்களை ஒன்று திரட்டி உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
News March 15, 2025
சோகத்தில் முடிந்த ஹோலி கொண்டாட்டம்.. 4 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் ஹோலி கொண்டாட்டம் முடிந்து, ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழந்தனர். பத்தாம் வகுப்பு மாணவர்களான அவர்கள் ஆற்றில் குளித்தபோது, திடீரென நீர்மட்டம் உயர்ந்து வெள்ளம் ஏற்பட்டதால் இந்த துயர சம்பவம் நேரிட்டது. நீண்ட போராட்டத்துக்கு பிறகு 4 சிறுவர்களின் உடல்களும் மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டன.