News March 14, 2025
20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்: அமைச்சர் அறிவிப்பு

அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி அல்லது கையடக்கக் கணினி வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ₹2,000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, லேப்டாப் (LAPTOP) அல்லது டேப் (TAB) பெற்று கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 1, 2025
BREAKING: அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் விலகல்?

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் மீண்டும் அதிருப்தியில் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கெனவே EPS மீது அதிருப்தியில் இருந்த அவரை, தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சமாதானம் செய்தனர். இந்நிலையில், அவர் தனது முடிவு குறித்து செப்.5-ம் தேதி கோபிச்செட்டிபாளையத்தில் பேசவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் சமாதானப் புறா பறக்குமா?
News September 1, 2025
UPI ஃபெயில் ஆயிடுச்சா? இத ட்ரை பண்ணுங்க

ஓட்டலில் வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு, UPI மூலம் பணம் அனுப்பினால், transaction பெயில் என மெசெஜ் வரும். உடனே கடைக்காரர் சூடாக நம்மளை பார்ப்பார். இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் இருந்து தப்பிக்க, 1)வேறொரு UPI ஆப்பில் முயற்சி செய்யலாம் 2)நெட் பேங்கிங் பயன்படுத்தலாம் 3)கடைகளுக்கு செல்லும் போது கையில் கொஞ்சம் காசு வைத்து கொள்ளலாம். 4)டெபிட்/ கிரெடிட் கார்டுகளை உபயோகிக்கலாம். SHARE IT.
News September 1, 2025
Parenting: டிகிரி மட்டும் போதாது.. இதையும் படிக்க வையுங்க..

முன்பெல்லாம் டிகிரி முடித்தாலே வேலை என்ற காலகட்டம் மாறி, தற்போது வேலை கிடைப்பதே கடினம் என்ற நிலை வந்துவிட்டது. இதனால் குழந்தைகளை எதை படிக்க வைப்பது என நீங்கள் குழம்ப வேண்டாம். உங்கள் குழந்தைகள் டிகிரி முடிப்பதோடு, AI சார்த்த படிப்புகள், டிஜிட்டல் மார்க்கெட்டிங், Data Science, அடிப்படை கோடிங், Interior Design, சட்டம் கற்பது அவசியம் என கல்வியாளர்கள் அறிவுறுத்துகின்றனர். SHARE.