News March 14, 2025

கால் இறுதியில் லக்சயா சென்…

image

பர்மிங்காமில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் லக்சயா சென் காலிறுதிக்கு முன்னேறினார். 2ஆது சுற்று ஆட்டம் ஒன்றில் அவர் இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லக்சயா சென், 21-13, 21-10 என்ற நேர்செட்டில் கிறிஸ்டியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.

Similar News

News March 14, 2025

தமிழ்நாட்டை சீண்டிய பவன் கல்யாண்

image

தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை விவகாரத்தில் பவன் கல்யாண் கருத்து தெரிவித்துள்ளார். தனது கட்சி விழாவில் தமிழ், கன்னடம், மராத்தி, ஹிந்தி மொழிகளில் பேசியவர், ஏன் இத்தனை மொழிகளில் பேசுகிறேன் என கேட்டார். தொடர்ந்து, தமிழ்நாடு மட்டுமல்ல, தேசத்திற்கே பல மொழிகள் தேவை எனவும், அப்போதுதான் ஒரு மாநிலத்தவரை, பிற மாநிலத்தவர் புரிந்து கொண்டு அன்பை பரிமாறிக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.

News March 14, 2025

நாளை தேர்வு எழுத முடியாதா… சிபிஎஸ்இ மீண்டும் வாய்ப்பு

image

ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. மேலும் சில மாநிலங்களில் நாளை (மார்ச் 15) கொண்டாடப்படவுள்ளது. இதனால் நாளை நடைபெறவுள்ள சிபிஎஸ்இ இந்தித் தேர்வுகளில் அந்த மாநில மாணவர்களால் பங்கேற்க முடியாது. அத்தகைய மாணவர்கள் பயப்படத் தேவையில்லை, தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்காக நடத்தப்படும் சிறப்புத் தேர்வுகளின்போது இவர்கள் அந்த தேர்வுகளை எழுதலாம் எனக் கூறியுள்ளது.

News March 14, 2025

வறுமையில் வாடும் முகலாயப் பேரரசரின் கொள்ளுப் பேத்தி

image

கடைசி முகலாயப் பேரரசரான பகதூர் ஷா, 1837இல் ஆங்கிலேயர்களால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார். பின்னர் 1857இல் சிப்பாய் புரட்சிக்கு காரணமென ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டு 1862இல் உயிரிழந்தார். அவரின் கொள்ளுப் பேத்தியான சுல்தானா பேகம், காெல்கத்தா அருகே குடிசை வீட்டில் வசிக்கிறார். அரண்மனையில் வாழ வேண்டிய அவர், தற்போது வறுமையில் வாடுகிறார். அவருக்கு அரசு உதவியும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

error: Content is protected !!