News March 14, 2025

தமிழக பட்ஜெட்டில் நெல்லையின் அறிவிப்பு

image

▶️ தாமிரப்பரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.400 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்.
▶️ போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 1 லட்சம் புத்தகங்கள், மாநாட்டு கூட வசதிகளுடன் நூலகங்கள்.
▶️நரசிங்கநல்லூரில் புதிய தொழிற்பேட்டை.
▶️ மீன் இறங்குதளம், மீன்பிடி வலைகள் பின்னுதல்.
▶️ரூ.225 கோடி மதிப்பீட்டில் 14.2 கிமீ மேற்கு புறவழிச்சாலை பணிகள் இந்தாண்டு தொடங்கும்.

Similar News

News April 21, 2025

நெல்லையில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை

image

திருநெல்வேலியில் செயல்படும் தனியார் சோலார் நிறுவனத்தில் 25 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு இளங்கலை அறிவியல்(BSC) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் மாத ஊதியமாக 25,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News April 21, 2025

பைக் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

image

நெல்லை கேடிசி நகரை சேர்ந்தவர் ஜெப்ரின் சாமுவேல் (22). இவர் திருச்சியில் உள்ள பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். நேற்று அவர் தனது இருசக்கர வாகனத்தில் டக்கரம்மாள்புரம் அருகே சென்ற போது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த சாமுவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 21, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஏப்.20] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

error: Content is protected !!