News March 14, 2025
அனைத்து சிறுமிகளுக்கும் புற்றுநோய் தடுப்பூசி!

பெண்களை தாக்கும் புற்றுநோய்களில் மிக அபாயகரமானதாக கருப்பைவாய் புற்றுநோய் கருதப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் 14 வயதுடைய அனைத்து சிறுமிகளுக்கும் கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசியை செலுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, இத்திட்டத்தை செயல்படுத்த பட்ஜெட்டில் ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News March 15, 2025
MLAக்கள் பிளாக்மெயில் செய்கிறார்கள்: சிவகுமார்

பெங்களூருவில் டிராஃபிக்கிற்கு அடுத்தபடியாக குப்பைகளை அகற்றுவது சவாலாகவுள்ளது. இது பற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், MLAக்கள் தான் காரணம் என குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார் Dy CM சிவகுமார். திடக்கழிவு மேலாண்மை விவகாரத்தை மிகப்பெரிய மாஃபியா கும்பல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், அதற்கேற்றபடி எம்எல்ஏக்களும் ₹800 கோடி வரை கேட்டு அரசை பிளாக்மெயில் செய்வதாக சாடியுள்ளார்.
News March 15, 2025
தனுஷ்கோடியில் பூநாரை சரணாலயம் ஏன்?

பூநாரை என தமிழில் அழைக்கப்படும் ஃப்ளமிங்கோ பறவைகள் ஆண்டுதோறும் நவம்பர் முதல் மார்ச் வரை தனுஷ்கோடிக்கு அதிக அளவில் வலசை வருகின்றன. சேறு மற்றும் சகதியில் உள்ள பாசிகளை உணவாக உட்கொள்ளும். பல்லுயிர்ப் பெருக்கம் நன்றாக உள்ள இடங்களையே இவை பெரும்பாலும் வலசைக்கு தேர்ந்தெடுக்கும். இதைக் கருத்தில் கொண்டே தனுஷ்கோடியை பூநாரை சரணாலயமாக மாற்ற பட்ஜெட்டில் முடிவு எடுக்கப்பட்டது.
News March 15, 2025
₹2,000 போதும்.. மாதம் முழுவதும் ஏசி பஸ்களில் ப்ரீ

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 630 வழித்தடங்களில் 3,056 பஸ்களை MTC இயக்குகிறது. இதில் நாள்தோறும் 32 லட்சம் பேர் பயணிப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது. தற்போது இந்த பஸ்களில் ₹1,000 பாஸ் இருந்தால், ஒரு மாதத்திற்கு பயணிக்கலாம். ஆனால் ஏசி பஸ்களில் செல்ல முடியாது. இதை கருத்தில் கொண்டு, ஏசி உள்ளிட்ட அனைத்து பஸ்களிலும் பயணிக்க ₹2,000 பாஸை விரைவில் MTC அறிமுகம் செய்யவுள்ளது.