News March 14, 2025

ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பார்க்

image

ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மேலும், இங்கு அறிவுசார் தொழில்நுட்ப வழித்தடமும் அமைக்கப்படும் எனவும் கூறியுள்ளார். ஓசூர் பெங்களூருக்கு அருகாமையில் இருப்பதால், சர்வதேச நிறுவனங்களை ஈர்க்கும் மையமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. TIDEL உயர் தொழில்நுட்ப பூங்கா, மாநிலத்தின் தெற்குப் பகுதிகளில் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்கும்.

Similar News

News August 15, 2025

கிருஷ்ணகிரி: இலவசமாக 2 GB டேட்டா, அன்லிமிட்டட் CALL, 100 SMS

image

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாட்டங்களில் BSNL 4G சேவை 341 கோபுரங்கள் மூலம் வழங்கப்படுகிறது. கூடுதலாக 50 கோபுரங்களும் அமைக்கப்படுகின்றன. மேலும், ரூ.1-க்கு ஒரு மாத 4G சேவை வழங்கும் திட்டத்தின்கீழ் இலவசமாக சிம்கார்டு வழங்கப்படுகின்றன. இதில், 2 GB ஸ்பீடு டேட்டா, 100 SMS/DAY, அன்லிமிட்டட் கால் வசதிகள் உள்ளன. இது வரும் 31 ஆம் தேதி வரை உள்ளது என தர்மபுரி மண்டல BSNL துணை மேலாளர் தெரிவித்துள்ளார். SHARE IT

News August 15, 2025

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் டீன் பதவியேற்பு

image

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி டீனாக பணியாற்றி வந்த டாக்டர் எம்.பூவதி தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி டீனாக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் கே.சத்யபாமா கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி டீனாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

News August 15, 2025

கிருஷ்ணகிரி: பத்திரம் தொலைந்தால் கவலை வேண்டாம்

image

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே இந்த லிங்க் மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். பத்திரம் மட்டுமல்லாமல் உங்கள் சொத்து பற்றிய பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற விபரங்களையும் <>இதில் <<>>பெற முடியும். மேலும் தகவல்களுக்கு மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை (04343-235233) அழைக்கலாம். *அனைவருக்கும் பகிரவும்*

error: Content is protected !!