News March 14, 2025
மழைநீரை உறிஞ்ச 7 பல்லுயிர்ப் பூங்காக்கள்

சென்னை பெருநகரப் பகுதிகளில் நிலத்தடி நீரை பெருக்க பல்லுயிர்ப் பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பெருநகரப் பகுதிகளில் ₹ 88 கோடி செலவில் மழைநீரை உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் (Sponge Park) அமைக்கப்படும் என பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News March 14, 2025
காணாமல் போனவரை கண்டுபிடித்த சோஷியல் மீடியா

பிஹாரைச் சேர்ந்த தேவி, கடந்த பிப்.23ல் தனது குடும்பத்துடன் மகா கும்பமேளாவிற்கு சென்றுள்ளார். கும்பமேளா கூட்டநெரிசலில் தொலைந்து போனவர், அங்கிருந்து ரயில் ஏறி ஜார்க்கண்டின் கர்வா மாவட்டத்திற்கு வந்து சேர்ந்துள்ளார். அவரை, உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் சோனி தேவி தங்க இடம் கொடுத்து பராமரித்துள்ளார். அவரை போட்டோ எடுத்து சோஷியல் மீடியாவில் போட, தேவியின் மகன் தன் தாயைக் கண்டுபிடித்து அழைத்து சென்றுள்ளார்.
News March 14, 2025
நடிகையிடம் ₹2.27 லட்சம் அபேஸ்

திருப்பதியில் ஸ்பெஷல் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி, நடிகை ரூபினியிடம் ₹2.27 லட்சம் மோசடி செய்துள்ளனர். ரூபினி, வெங்கடாசலபதியின் தீவிர பக்தை என தெரிந்து கொண்ட சரவணன் என்ற நபர் அவரை அணுகியுள்ளார். மேலும், பல பிரபலங்களுக்கு ஸ்பெஷல் தரிசனங்களை ஏற்பாடு செய்ததாக போலியான புகைப்படங்களை காட்டி சரவணன் மோசடி செய்துள்ளார். 1980களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களில் ரூபினி நடித்துள்ளார்.
News March 14, 2025
வில்லத்தனத்தில் வெறித்தனம் காட்டும் ரவி மோகன்

‘பராசக்தி’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இணையத்தில் லீக்காகி வேகமாக பரவிய நிலையில், அது தற்போது டெலீட் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த வீடியோவை பார்த்தவர்கள், ரவி மோகன் வெறித்தனமாக வில்லத்தனம் காட்டுவதாகவும், நிச்சயம் சம்பவம் உறுதி எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர். இலங்கையில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இது SK கெரியரில் முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.