News March 14, 2025
அகழ்வாராய்ச்சிக்கு ₹7 கோடி ஒதுக்கீடு

சிவகங்கை, சேலம், கோவை, கள்ளக்குறிச்சி, கடலூர், தென்காசி, தூத்துக்குடி, நாகை என 8 மாவட்டங்களில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி நடைபெறும் என பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இதற்காக ₹7 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஓலைச்சுவடி கையெழுத்து பிரதிகளை மின்பதிப்பாக மாற்ற ₹2 கோடி, 500 இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் பதிப்பிட ₹10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 14, 2025
நடிகையிடம் ₹2.27 லட்சம் அபேஸ்

திருப்பதியில் ஸ்பெஷல் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி, நடிகை ரூபினியிடம் ₹2.27 லட்சம் மோசடி செய்துள்ளனர். ரூபினி, வெங்கடாசலபதியின் தீவிர பக்தை என தெரிந்து கொண்ட சரவணன் என்ற நபர் அவரை அணுகியுள்ளார். மேலும், பல பிரபலங்களுக்கு ஸ்பெஷல் தரிசனங்களை ஏற்பாடு செய்ததாக போலியான புகைப்படங்களை காட்டி சரவணன் மோசடி செய்துள்ளார். 1980களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களில் ரூபினி நடித்துள்ளார்.
News March 14, 2025
வில்லத்தனத்தில் வெறித்தனம் காட்டும் ரவி மோகன்

‘பராசக்தி’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இணையத்தில் லீக்காகி வேகமாக பரவிய நிலையில், அது தற்போது டெலீட் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த வீடியோவை பார்த்தவர்கள், ரவி மோகன் வெறித்தனமாக வில்லத்தனம் காட்டுவதாகவும், நிச்சயம் சம்பவம் உறுதி எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர். இலங்கையில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இது SK கெரியரில் முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News March 14, 2025
இந்த 2 நாள்கள் வங்கிகள் இயங்காது

ஒருங்கிணைந்த வங்கிகள் சங்கம் (UFBU) சார்பில், வரும் 24, 25ஆம் தேதிகளில் நாடு தழுவிய ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு நாள்களும் வங்கிகள் செயல்படாது. இந்திய வங்கிகள் அசோசியேஷனுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், UFBU இந்த ஸ்டிரைக்கை அறிவித்துள்ளது. வாரத்திற்கு 5 நாள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளனர்.