News March 14, 2025
மனைவியின் தங்கை கர்ப்பம்.. கணவருக்கு ஆயுள் தண்டனை

மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கோர்ட் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. ஒடிசாவை சேர்ந்த ராஜ்குமார் நாயக், கடந்த 2018இல் சென்னை சாலவாயலில் தங்கி பணிபுரிந்தார். அப்போது, தனது மனைவியின் தங்கையான 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி வன்கொடுமை செய்தார். இந்த வழக்கை விசாரித்த போக்சோ கோர்ட், ராஜ்குமாருக்கு ஆயுள் தண்டனையோடு ₹1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
Similar News
News March 14, 2025
நாளை தேர்வு எழுத முடியாதா… சிபிஎஸ்இ மீண்டும் வாய்ப்பு

ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. மேலும் சில மாநிலங்களில் நாளை (மார்ச் 15) கொண்டாடப்படவுள்ளது. இதனால் நாளை நடைபெறவுள்ள சிபிஎஸ்இ இந்தித் தேர்வுகளில் அந்த மாநில மாணவர்களால் பங்கேற்க முடியாது. அத்தகைய மாணவர்கள் பயப்படத் தேவையில்லை, தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்காக நடத்தப்படும் சிறப்புத் தேர்வுகளின்போது இவர்கள் அந்த தேர்வுகளை எழுதலாம் எனக் கூறியுள்ளது.
News March 14, 2025
வறுமையில் வாடும் முகலாயப் பேரரசரின் கொள்ளுப் பேத்தி

கடைசி முகலாயப் பேரரசரான பகதூர் ஷா, 1837இல் ஆங்கிலேயர்களால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார். பின்னர் 1857இல் சிப்பாய் புரட்சிக்கு காரணமென ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டு 1862இல் உயிரிழந்தார். அவரின் கொள்ளுப் பேத்தியான சுல்தானா பேகம், காெல்கத்தா அருகே குடிசை வீட்டில் வசிக்கிறார். அரண்மனையில் வாழ வேண்டிய அவர், தற்போது வறுமையில் வாடுகிறார். அவருக்கு அரசு உதவியும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
News March 14, 2025
ஐபோன் வைத்திருப்பவர்களுக்கு அவசர அறிவிப்பு

மற்ற ஸ்மார்ட்ஃபோன்களை ஒப்பிடுகையில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் பாதுகாப்பு அம்சங்கள் மிக்கவை என பரவலாக நம்பப்படுகிறது. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் ஒரு அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஐபோன்களையும், ஐபேடுகளையும் வைத்திருப்பவர்கள் அவற்றை உடனடியாக அப்டேட் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது. சைபர் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக இதை செய்யுமாறு அது அறிவுறுத்தியுள்ளது.