News March 14, 2025
மின்சாரம் தாக்கி கோவில் பூசாரி பலி

தர்மபுரி, மாரண்டஹள்ளியை சேர்ந்தவர் மாதையன் (45). இவர், பாரூர் அருகே உள்ள மொழிவயனுார் முனியப்பன் கோவில் பூசாரியாக உள்ளார். இந்நிலையில் கடந்த 12 தேதி காலை கோவிலில் பூஜை செய்ய சென்றுள்ளார். அப்போது கோவிலின் பின்புறமாக இருந்த, இரும்பு ஷீட்டை அவர் தொட்டபோது அதில் கசிந்த மின்சாரம் தாக்கியதில், மாதையன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றது.
Similar News
News March 14, 2025
காவல்துறை சார்பாக இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை சார்பில் இன்று 14.03.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை ரோந்து பணியில் கிருஷ்ணகிரி காவல் துணை கண்காணிப்பாளர் முரளி தலைமையில் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர்,தேன்கனிக்கோட்டை ஆகிய இடங்களில் இரவு ரோந்து பணியில் இடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி மற்றும் காவல் கட்டுபாட்டு அறை-04343230100 எண் அவசர உதவி எண் 100 காவல்துறை சார்பாக வெளியிட்டனர்.
News March 14, 2025
அசுர வேகத்தில் வளரும் ஓசூர்

ஓசூரில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, விமான நிலையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அருகிலுள்ள பெங்களூருவுக்கு இணையான வளர்ச்சியை உருவாக்கும் தொலைநோக்கு பார்வையுடன் டைடல் உயர் தொழில்நுட்ப பூங்காவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பல சர்வதேச நிறுவனங்களை ஈர்க்கும் மையமாக மாறும் என தொழில் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
News March 14, 2025
ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பார்க்

ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மேலும், இங்கு அறிவுசார் தொழில்நுட்ப வழித்தடமும் அமைக்கப்படும் எனவும் கூறியுள்ளார். ஓசூர் பெங்களூருக்கு அருகாமையில் இருப்பதால், சர்வதேச நிறுவனங்களை ஈர்க்கும் மையமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. TIDEL உயர் தொழில்நுட்ப பூங்கா, மாநிலத்தின் தெற்குப் பகுதிகளில் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்கும்.