News March 14, 2025
சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை!

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நுரையீரல் இரத்தக் குழாய் அடைப்பினால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த சுமதி (வயது 40), வனிதா (வயது 64) ஆகியோருக்கு ஐவிசி பில்டர் எனப்படும் உயரிய சிகிச்சையை இருதயத்துறை தலைவர் பேராசிரியர் மருத்துவர்.கண்ணன் தலைமையிலான மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்து இரத்தக் குழாய் கட்டியை அகற்றி சாதனை. மருத்துவர்களை நேரில் அழைத்து மருத்துவமனை முதல்வர் வாழ்த்து!
Similar News
News March 14, 2025
வெற்றி நாயகனான கூலித் தொழிலாளியின் மகன்

சேலம்: வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த மோ.அஜித். இவர் சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர்.தாயும் கூலித் தொழிலாளி. இத்தனை கடின சூழ்நிலைகளையும் கடந்து,அரசு பணி தேர்வுக்கு தன்னம்பிக்கையுடன் படித்து தற்போது வெற்றி பெற்றுள்ளார். இப்பொழுது இளநிலை வருவாய் ஆய்வாளராக குறிஞ்சிப்பாடி, கடலூரில் பணியமர்த்தப்பட்ட சான்றிதழை கடலூர் மாவட்ட ஆட்சியர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்களிடம் பெற்றார். இவரை வாழ்த்தலாமே…!?
News March 14, 2025
சேலம் ; கல்லூரி பஸ் மோதியதில் சிறுவன் பலி

சேலம் : வீரகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரையின் மகன் கிருபாகரன்( 10) அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இன்று(மார்ச் 14) காலை கிருபாகரன் பள்ளிக்குச் சென்றபோது தனியார் கல்லூரி பேருந்து கிருபாகரன் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதனால் கி பலத்த காயம் அடைந்த கிருபாகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வீரகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News March 14, 2025
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை ; 4 பேருக்குஆயுள் தண்டனை

சேலம் : கடந்த 2017ம் ஆண்டு ஓமலூர் பகுதியைச் சேர்ந்த மன நலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியை டிபன் வாங்கித் தருவதாகச் சொல்லி அழைத்து முள்ளுக்காட்டில் வைத்து 4 பேர் பாலியல் வன்புணர்ச்சி செய்தனர். இதுகுறித்து, தாரமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்ட 4 பேருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.