News March 14, 2025

இரட்டை முதியவர்கள் கொலை வழக்கு: 5 தனிப்படை அமைப்பு

image

ஒன்னல்வாடியைச் சேர்ந்தவர் லூர்துசாமி, இவரது மனைவியின் சகோதரி எலிசபெத் ஆகியோர் வீட்டில் இருக்கும்பொழுது ,வீடு தீ பற்றி எறிந்துள்ளது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டினுள் பார்க்கும் பொழுது இருவரும் கழுத்தறுக்கப்பட்டு இறந்து கிடந்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறை இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க டிஎஸ்பி சிந்து தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.

Similar News

News March 15, 2025

கிருஷ்ணகிரி மாவட்ட இரவு நேர ரோந்து பணி

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று 14.03.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.

News March 14, 2025

காவல்துறை சார்பாக இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை சார்பில் இன்று 14.03.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை ரோந்து பணியில் கிருஷ்ணகிரி காவல் துணை கண்காணிப்பாளர் முரளி தலைமையில் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர்,தேன்கனிக்கோட்டை ஆகிய இடங்களில் இரவு ரோந்து பணியில் இடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி மற்றும் காவல் கட்டுபாட்டு அறை-04343230100 எண் அவசர உதவி எண் 100 காவல்துறை சார்பாக வெளியிட்டனர்.

News March 14, 2025

அசுர வேகத்தில் வளரும் ஓசூர்

image

ஓசூரில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, விமான நிலையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அருகிலுள்ள பெங்களூருவுக்கு இணையான வளர்ச்சியை உருவாக்கும் தொலைநோக்கு பார்வையுடன் டைடல் உயர் தொழில்நுட்ப பூங்காவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பல சர்வதேச நிறுவனங்களை ஈர்க்கும் மையமாக மாறும் என தொழில் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!