News March 14, 2025
18ம் படி ஏறியதும் பகவான் தரிசனம்! இன்று முதல் அமல்

சபரிமலையில் பங்குனி மாத பூஜைக்காக கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. தொடர்ந்து நாளை முதல் வரும் 19 ஆம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். இம்மாதம் முதல் தரிசனத்தில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, 18ஆம் படியேறியதும் கொடிமரம் வழியாக சென்று நேரடியாக ஐயப்பனை தரிசிக்கலாம். இதன் மூலம் பக்தர்களுக்கு ஐயப்பனை தரிசிப்பதற்கான நேரம் கூடுதலாக கிடைக்கும்.
Similar News
News March 14, 2025
ஆப்கான் கிரிக்கெட் வீரருக்கு சோகம்… தாங்க முடியாத இழப்பு!

அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை உற்சாகப்படுத்துபவர் ஆப்கான் கிரிக்கெட் வீரர் ஹஸ்ரத்துல்லா சசாய். ஆனால், அவரது வீட்டில் நடந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹஸ்ரத்துல்லாவின் 2 வயது மகள் உயிரிழந்துள்ளதாக, சக வீரர் கரிம் ஜனத் தெரிவித்துள்ளார். உயிரிழந்த பிஞ்சுக் குழந்தையின் படத்தைப் பதிவிட்ட அவர், இத்தகைய கடினமான நேரத்தில் இதயம் சோகத்தில் மூழ்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
News March 14, 2025
மார்ச் 28-ல் தவெக பொதுக்குழு – அழைப்பு விடுத்த விஜய்!

2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கி களமாடி வருகிறார் தவெக தலைவர் விஜய். கட்சியில் இதுவரை 114 மா.செ.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், உட்கட்டமைப்பு நிர்வாகிகள் நியமனத்திற்கான ஒப்புதலை பெற்று தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப விஜய் திட்டமிட்டுள்ளார். அதற்காக, மார்ச் 28-ல் தவெக பொதுக்குழு நடைபெறும் என அறிவித்த விஜய், நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
News March 14, 2025
குட் பேட் அக்லி இன்னொரு பாட்ஷாவா? – கதை இதுதானாம்!

அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி பட்டையை கிளப்பிய நிலையில், படத்தின் கதை என்னவென்று இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. அதாவது, கொடூரமான டானாக இருந்த AK, வன்முறையை கைவிட்டு அமைதியான வாழ்க்கைக்கு திரும்புகிறாராம். ஆனால், கடந்த காலத்தில் செய்த செயல்கள் அவரை மீண்டும் துரத்துகிறதாம். அதனை ஏகே எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை என சொல்லப்படுகிறது. பாட்ஷா படம் மாதிரி இருக்குல்ல…