News March 14, 2025
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ஹால் டிக்கெட்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28 – ஏப்.15 வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை 4,88,876 பள்ளி மாணவர்கள், 25,888 தனித்தேர்வர்கள், 272 சிறைக்கைதிகள் என மொத்தம் 9,13,036 பேர் எழுதுகின்றனர். இந்நிலையில் இந்த தேர்வை எழுதும் மாணவர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. http://www.dge.tn.gov.in-ல் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதை சரிபார்க்கவும்.
Similar News
News March 7, 2026
TN-ஐ காப்பாற்ற இறைவனால் தான் முடியும்: நயினார்

கஞ்சா போதை பழக்கத்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டை காப்பாற்ற இறைவனால்தான் முடியும் என்பதால் திருநள்ளாற்றில் சாமி தரிசனம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இன்று சனிப்பெயர்ச்சி நடப்பது போல், தமிழகத்தில் திமுக ஆட்சியும் அகல வேண்டும் என்றும் இந்து மதத்திற்கும், சனாதன தர்மத்திற்கும் எதிரான ஆட்சி இது எனவும் சாடியுள்ளார்.
News March 7, 2026
சங்கீதாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்: தமிழிசை

சங்கீதா மட்டுமல்ல, அந்த இடத்தில் எந்தப் பெண் இருந்தாலும் அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என தமிழிசை கூறியுள்ளார். இது ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை என்பதால் தலையிட தான் விரும்பவில்லை என்ற அவர், சங்கீதா கூறுவதை போல விஜய்யால் அவர் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருந்தால் அது தவறு எனவும் பேசியுள்ளார். மேலும், இதுபோல பெண்கள் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதே தன்னுடைய கவலை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 7, 2026
தமிழகத்தை உலுக்கிய வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை கல்லூரி <<19320282>>மாணவி பாலியல்<<>> வன்கொடுமை வழக்கு குற்றவாளிகள் 3 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி மகளிர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட மாணவிக்கு ₹7 லட்சம் இழப்பீடு தர அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பருக்கு ₹2 லட்சம் இழப்பீடு வழங்கவும் ஆணையிட்டுள்ளது. 4 மாதங்களுக்குள் வழக்கில் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டதை மக்கள் வரவேற்றுள்ளனர்.


