News March 14, 2025
மின்சாரம் தாக்கி கோவில் பணியாளர் உயிரிழப்பு

வானூர் அடுத்த தைலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் கோவில் ராஜகோபுரம் அருகே உள்ள அலுமினிய பைப்பிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட அண்ணாதுரை படுகாயமடைந்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News September 13, 2025
விழுப்புரம்: திட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில், அனைத்து துறைகளுக்கு இடையேயான திட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம், இன்று (செப்.13) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கி. அரிதாஸ், திண்டிவனம் சார் ஆட்சியர் அ.ல. ஆகாஷ் உட்பட, துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
News September 13, 2025
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் குடியிருப்பு வீடு கட்டும் திட்டங்களின் முன்னேற்றப் பணிகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் இன்று நடைபெற்றது.
News September 13, 2025
விழுப்புரம்: தேசிய மக்கள் நீதி மன்றம்

விழுப்புரத்தில், தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில், தேசிய மக்கள் நீதி மன்றம், இன்று (செப்.13) நடைபெற்றது. மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதல் தளத்தில், நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, ஐகோர்ட் நீதிபதி தண்டபாணி தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். இந்த மக்கள் நீதிமன்றத்தில், பல்வேறு வழக்குகளுக்கு, சுமூகமான முறையில் தீர்வு காண, நடவடிக்கை எடுக்கப்பட்டது.