News March 14, 2025
ஆணவக்கொலை: மகளை தீர்த்துக்கட்டிய கொடூர தந்தை

உ.பி. நொய்டாவைச் சேர்ந்த இளம்பெண் நேஹா, பெற்றோர் எதிர்ப்பை மீறி வேறு சமூக இளைஞரை மார்ச் 11ம் தேதி திருமணம் செய்துள்ளார். மறுநாளே நேஹாவை நைசாக பேசி அவரது தந்தை தங்களது வீட்டிற்கு அழைத்துள்ளார். அங்கு வந்த அவரை, தன் மகனுடன் சேர்ந்து தந்தை கொலை செய்துள்ளார். இருவரையும் கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. மகளின் உயிரைவிட கௌரவம் பெரியதா என்ன?
Similar News
News March 7, 2026
ஜன நாயகன் படம்.. வெளியானது UPDATE

சென்சார் பிரச்னையில் சிக்கிய ‘ஜன நாயகன்’ படத்தின் நிலவரம் என்னவானது என்றே தெரியாமல் இருந்தது. இந்நிலையில், விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. சென்சார் போர்டின் மறு ஆய்வுக்குழு நாளை மறுநாள் (மார்ச் 9) மதியம் 2 மணிக்கு படத்தை பார்க்கவுள்ளதாம். இதனையடுத்து, 20 நாள்களில் படத்திற்கு சென்சார் சான்று வழங்கப்பட்டு படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணி தொடங்கும். விஜய் ரசிகர்களே, ரெடியா!
News March 7, 2026
கேப்டன் சூர்யகுமார் ஓய்வு பெறுகிறாரா?

இந்திய T20 அணியின் கேப்டன் சூர்யகுமார் நாளை தனது ஓய்வை அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான T20 WC இறுதிப் போட்டிக்கு பின், அவர் அனைத்து வடிவங்களிலிருந்தும் விடைபெறுவார் என்று கூறப்படுகிறது. வயது & ஃபார்ம் பிரச்னை காரணமாக ஓய்வு பெற உள்ளதாக கூறப்படுகிறது. உலகக்கோப்பையை வென்ற பிறகு ரோஹித், கோலி ஓய்வை அறிவித்தது போல சூர்யகுமாரும் திட்டமிட்டுள்ளாரா?
News March 7, 2026
OPS என்றால் விசுவாசம்: CM ஸ்டாலின்

எப்போதும் அன்போடும், அமைதியோடும் சிரித்த முகத்துடன் இருப்பவர்தான் OPS என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரையில் பேசிய அவர், OPS என்றால் ஞாபகத்துக்கு வரும் ஒரே சொல் விசுவாசம், ஆனால் துரோகத்தின் அடையாளமாக இருக்கக்கூடியவர் EPS என சாடியுள்ளார். தன்னை காப்பாற்றிக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர் EPS எனவும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.


