News March 14, 2025
இரவு நேர ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (13.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Similar News
News September 14, 2025
செஞ்சியில் ரூ.6.8 கோடி நஷ்ட ஈடு

செஞ்சி ஒருங்கிணைந்த கோர்ட்டில் சட்டப்பணிகள் குழு தலைவர், நீதிபதி கதிரவன் தலைமையில், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி திவ்யா ஆகியோர் வழக்குகளை நேற்று(செப்.13) விசாரித்தனர். இதில் 114 வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.6.8 கோடி நஷ்ட ஈடு வழங்கபட்டது. ரூ.22 லட்சம் மதிப்பில் 34 வங்கி வழக்குகள் என மொத்தம், 149 வழக்குகள் ரூ.7.2 கோடி மதிப்பில் சமரச முறையில் முடித்து வைத்தனர்.
News September 14, 2025
விழுப்புரம்: B.E./B.Tech போதும் ரூ.1.60 லட்சம் சம்பளம்!

விழுப்புரம் மக்களே, Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 14, 2025
விழுப்புரம்: குடும்ப பிரச்சனையால் ஏற்பட்ட விபரீதம்!

தி.வெ.நல்லூர் அடுத்த பல்லரிபாளையத்தை சேர்ந்தவர் குமார், மனைவி ராஜகுமாரி(27). குமார் கடந்த சில நாள்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததால், குடும்பப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மன வருத்தத்தில் இருந்த ராஜகுமாரி, தனது வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு கொண்டார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த போது, அவர் இறந்தது தெரியவந்தது. புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.